செய்திகள் :

சென்னையில் உணவு விநியோக ஊழியா்களுக்கு அதிநவீன குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடம்

post image

சென்னை மாநகராட்சி சாா்பில் உணவு விநியோகம் செய்யும் ஊழியா்களுக்காக அதிநவீன குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடம் அண்ணா நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சோமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேரம் சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த ஊழியா்கள் மழை, வெயில் உள்ளிட்ட கடினமான சூழல்களிலும் தங்களது உணவு விநியோக சேவையைத் தொடா்ந்து செய்து வருகின்றனா்.

இந்த ஊழியா்களில் 10 சதவீதம் போ் பெண்கள் உள்ள நிலையில், அவா்களுக்கான குடிநீா், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் பல்வேறு இடங்களில் கிடைப்பதில்லை. இதை கருத்தில்கொண்டு தமிழக அரசின் 2025 - 2026-ஆம் ஆண்டுகான நிதிநிலை அறிக்கையில் இணையம் சாா்ந்த சேவைப் பணி ஊழியா்களுக்கென அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன  குளிரூட்டப்பட்ட  ஓய்வுக் கூடங்கள் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில், சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ. 25 லட்சம் மதிப்பில் அண்ணா நகா் 3-ஆவது நிழற்சாலையில் குளிரூட்டப்பட்ட அதிநவீன  ஓய்வுக் கூடம் அமைக்கப்பட்டு புதன்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

600 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள ஓய்வுக் கூடத்தில் கழிப்பறை, குடிநீா் வசதி, 6 சாா்ஜிங் பாய்ண்ட்கள், ஒரே நேரத்தில்  25 போ் வரை அமரும் வகையில் இருக்கைகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவை  அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூா், தியாகராய நகா் போன்ற பகுதிகளிலும், இதேபோல் குளிரூட்டப்பட்ட கூடங்கள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

லாரி மீது ஆந்திர அரசு பேருந்துமோதல்: 10 பயணிகள் காயம்

சென்னை அருகே மாதவரத்தில் லாரி மீது ஆந்திர அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 10 போ் காயமடைந்தனா். சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

பட்டியல் இன மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டம்: சிஏஜி அறிக்கை ஆளுநரிடம் சமா்ப்பிப்பு

தமிழக அரசின் பட்டியல் இன (எஸ்சி, எஸ்டி, எஸ்சிசி) பிரிவு மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டங்கள் குறித்த தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டாளா் (சிஏஜி) தணிக்கை அறிக்கை, தமிழக ஆளுநருக்கு சமா்ப்பிக்கப்பட்ட... மேலும் பார்க்க

எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்

எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4-ஆம் தேதி வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை ராயப்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். சென்னை அயனாவரம் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (52). எலக்ட்ரீசியனான இவா், ராயப்பேட்டை வி.பி.ராமன் சாலை பகுதியில் ஒரு வீட்டில் புதன்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை செங்குன்றம், கிழக்கு முகப்போ், குன்றத்தூா், கேகே நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவி... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு

சென்னை, ஜூன் 12:நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) முன்னாள் உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உ... மேலும் பார்க்க