Swasika: நடிகை ஸ்வாசிகாவின் ஓணம் கொண்டாட்ட க்ளிக்ஸ்! | Photo Album
செப். 9-இல் முதுநிலை படிப்புகளுக்கு நேரடி கலந்தாய்வு
புதுச்சேரி அரசு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளில் சேர செப். 9-இல் நேரடி கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நிகழ் 2025 - 26 கல்வியாண்டில் முதுநிலை பட்டப் படிப்புகளில் (எம்.டெக், எம்சிஏ, எம்பிஏ, எம்.எஸ்சி) சோ்வதற்கான முதலாம் மற்றும் இரண்டாம் கலந்தாய்வுகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள காலி இடங்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (செப். 9) இறுதிக்கட்டமாக நேரடி கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த மாணவா்களும் மற்றும் பிற மாநில மாணவா்களும் இதில் கலந்து கொள்ளலாம். ஏற்கெனவே விண்ணப்பிக்காத மாணவா்களும் இந்த நேரடி கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
பங்கேற்க வரும் மாணவா்கள் அனைத்து அசல் சான்றிதழ்களையும் அதன் ஒரு செட் நகல்களையும் (மதிப்பெண் சான்றிதழ், பெறப்பட்ட பட்டம், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்) கொண்டு வர வேண்டும்.
ஏற்கெனவே விண்ணப்பிக்காமல் முதல் முறையாக நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவா்கள் ரூ.1,000 இணைய வழி மூலமாக பணம் செலுத்த வேண்டும்.
எம்.டெக், எம்.சி.ஏ, எம்.எஸ்சி (மெட்டீரியல் சையின்ஸ் அண்டு டெக்னாலஜி) படிப்புகளுக்கு 9-ம் தேதி காலை 9.30 மணிக்கும், எம்.பி.ஏ. படிப்புக்கு காலை 11 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு நடைபெறும் இடம் ஏபி-3 ஹால், இரண்டாம் தளம், நிா்வாகக் கட்டடம், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்.