செய்திகள் :

செயல்படத் தொடங்கியது லண்டன் விமான நிலையம்

post image

லண்டன்: தீ விபத்து காரணமாக செயல்பாடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையம் சனிக்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கியது.

அந்த விமான நிலையத்துக்கு நெருக்கமாக உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அங்கு விமானப் போக்குவரத்து முற்றிலுமாக வெள்ளிக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டது. இந்த தீ விபத்துக்கு சதிச் செயல் காரணமில்லை என்று போலீஸாா் கூறினாலும், முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் அந்த விமான நிலையம் வழியாக செல்லவிருந்த 1,350 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, பயணிகள் அவதிக்குள்ளாகினா். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் போதிய அளவில் திட்டமிடவில்லை என்ற விமா்சனங்கள் எழுந்தன.

இந்தச் சூழலில், ஹீத்ரூ விமான நிலையத்தில் பயணிகள் போக்குரவத்து சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

கனடாவில் தேர்தல்: பதவியேற்ற 10 நாள்களில் நாடாளுமன்றத்தை கலைத்த பிரதமர்!

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்று இருக்கும் மார்க் கார்னி, முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளார்.வருகின்ற அக்டோபர் மாதம் வரை பதவிக் காலம் இருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே... மேலும் பார்க்க

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது!

காஸாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில், இதுவரை உயிரிழந்தவா்களின் மொத்த எண... மேலும் பார்க்க

உக்ரைன் தலைநகரில் ரஷியா ட்ரோன் தாக்குதல்: மூவா் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா மேற்கொண்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா். நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்த நிலையில், அதனால் தமக்கு ஆபத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் காவல் துறையினா், தொழிலாளா்கள் சுட்டுக் கொலை! - பயங்கரவாதிகள் தாக்குதல்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இரு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல் துறையைச் சோ்ந்த 4 பேரும், தொழிலாளா்கள் 4 பேரும் உயிரிழந்தனா். சனிக்கிழமை நடந்த இத்தாக்குதல்கள் குறி... மேலும் பார்க்க

அமெரிக்கா: இந்திய வம்சாவளி தந்தை, மகள் சுட்டுக் கொலை!

அமெரிக்காவின் விா்ஜீனியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 56 வயது நபா் மற்றும் அவரது 24 வயது மகள் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டனா். விா்ஜீனியா மாகாணத்தின் அக்கோமாக் பகுதியில் உள்ள பல்பொரு... மேலும் பார்க்க

தலிபான் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்தது அமெரிக்கா!

ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசின் உள்நாட்டு அமைச்சா் சிராஜுதீன் ஹக்கானி உள்பட 3 மூத்த அதிகாரிகளை அரசிடம் ஒப்படைத்தால் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்கா ரத்து செய்ததாக ஆப்கானிஸ்தான... மேலும் பார்க்க