செய்திகள் :

நகைச்சுவைப் பேச்சாளருக்கு எதிர்ப்பு: ஹோட்டலை சூறையாடிய சிவசேனை கட்சியினர்!

post image

மும்பையில் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்து பேசியதால் நகைச்சுவைப் பேச்சாளர் குணால் கம்ரா நிகழ்ச்சி நடத்திய ஹோட்டல் மீது சிவசேனை கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.

மகாராஷ்டிரத்தில் பாஜகவைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல்வராக சிவசேனை கட்சியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவி வகிக்கிறார்.

இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்யும் விதமாக பிரபல நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா பேசிய நிலையில் அவர் நிகழ்ச்சி நடத்திய ஹோட்டல் மீது சிவசேனை கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மும்பையின் கார் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அவரது நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. ’நயா பாரத்’ என பெயரிடப்பட்ட அந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் தற்போதைய அரசியல் குறித்து குணாள் கம்ரா பேசினார். அதில், ஷிண்டே சிவசேனை கட்சியை இரண்டாகப் பிரித்து பாஜகவுடன் கூட்டணி வைத்ததை விமர்சித்த குணாள் கம்ரா, ஷிண்டேவை துரோகி எனக் கூறினார்.

இதையும் படிக்க | புல்லட் ரயில் கட்டுமான தளத்தில் விபத்து: 25 ரயில்கள் ரத்து!

மேலும், ஷிண்டேவை கேலி செய்யும் விதமாக அவரது பெயரைக் குறிப்பிடாமல் அவரது தோற்றத்தை மட்டும் குறிப்பிட்டு ’தானேவிலிருந்து ஒரு தலைவர்’ என்ற பாடலை பாடி அதனை தனது சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தார் குணாள் கம்ரா.

இதனால், கோபமடைந்த சிவசேனை கட்சித் தொண்டர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கம் இருக்கும் ஹோட்டலை சூறையாடினர். அங்கிருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்திய நிலையில், குணாள் கம்ராவை கைது செய்யுமாறு போலீஸில் புகாரளித்துள்ளனர்.

குணாள் கம்ராவுக்கு சர்ச்சைகள் புதிதானது அல்ல. அவரது அரசியல் நகைச்சுவை நிகழ்ச்சிகள் தொடர்பாக பலமுறை அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க | கனடாவில் தேர்தல்: பதவியேற்ற 10 நாள்களில் நாடாளுமன்றத்தை கலைத்த பிரதமர்!

அவருடைய யூடியுப் சேனலில் பல அரசியல் தலைவர்கள், செய்தியாளர்கள் என பலரைப் பற்றி நகைச்சுவையாக அவர் பேசும் விடியோக்கள் உள்ளன. ஆனால் இந்தமுறை அதற்கான எதிர்ப்பு மிகவும் மோசமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

”சிவசேனை கட்சியினரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு என்பது எங்கு இருக்கிறது?” என சிவசேனை (யுபிடி) கட்சித் தலைவர் ஆதித்யா தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டியுள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால், தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலா மருத்துவமனையைக் கைப்பற்றுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது... மேலும் பார்க்க

கச்சத்தீவு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப்.15-இல் இறுதி விசாரணை

நமது நிருபர்கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக வரும் செப்.15-ஆம் தேதிக்கு வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க... மேலும் பார்க்க

2 ஆண்டுகளில் 12,957 கூட்டுறவு சங்கங்கள் பதிவு: அமித் ஷா

கடந்த 2 ஆண்டுகளில் வேளாண்மை, பால்வளம் மற்றும் மீன்வளம் என 12,957 புதிய கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: குணால் காம்ரா

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சவை பேச்சாளா் குணால் காம்ரா தெரிவித்துள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ... மேலும் பார்க்க

கொதிகலன் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட புதிய கொதிகலன் சட்ட மசோதா-2024 மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின... மேலும் பார்க்க