செய்திகள் :

நாக்பூர் வன்முறை: முக்கிய குற்றவாளியின் வீடு இடித்துத் தரைமட்டம்

post image

நாக்பூர் வன்முறைக்கு முக்கியக் காரணமாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்படும் ஃபாஹிம் கான் வீட்டை, ஆயுதம் தாங்கிய காவல்துறை பாதுகாப்புடன் பொதுப் பணித் துறை அதிகாரிகள் இன்று காலை இடித்துத் தரைமட்டமாக்கினர்.

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் கடந்த வாரம் வெடித்த வன்முறையில் ஈடுபட்டவா்களைக் கண்டுபிடித்து கைது செய்ய நகர காவல்துறை சாா்பில் 18 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரத்தில் சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி வலதுசாரி அமைப்புகள் நாக்புரியில் கடந்த திங்கள்கிழமை நடத்திய போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது.

பொதுமக்களின் வீடுகள், வாகனங்களை சேதப்படுத்திய வன்முறையாளா்கள், போலீஸாா் மீது பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனா். 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் காயமடைந்த இந்த வன்முறை தொடா்பாக இதுவரை 69 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் சிறுபான்மை ஜனநாயகக் கட்சித் தலைவா் ஃபாஹிம் கான் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சோ்ந்த 8 பேரும் அடங்குவா். ஃபாஹிம் கான் உள்பட 6 போ் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன்முறை தொடா்பான 5 வெவ்வேறு வழக்குகளில் இதுவரை 200 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். கலவரத்தின் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்ட மேலும் 1,000 பேரை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டியுள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால், தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலா மருத்துவமனையைக் கைப்பற்றுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது... மேலும் பார்க்க

கச்சத்தீவு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப்.15-இல் இறுதி விசாரணை

நமது நிருபர்கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக வரும் செப்.15-ஆம் தேதிக்கு வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க... மேலும் பார்க்க

2 ஆண்டுகளில் 12,957 கூட்டுறவு சங்கங்கள் பதிவு: அமித் ஷா

கடந்த 2 ஆண்டுகளில் வேளாண்மை, பால்வளம் மற்றும் மீன்வளம் என 12,957 புதிய கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: குணால் காம்ரா

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சவை பேச்சாளா் குணால் காம்ரா தெரிவித்துள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ... மேலும் பார்க்க

கொதிகலன் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட புதிய கொதிகலன் சட்ட மசோதா-2024 மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின... மேலும் பார்க்க