Siragadikka Aasai : ரோகிணி சிக்கியது கனவா? நிஜமா? - பரபர புரொமோ
சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரத்திற்கான புரொமோவில் ரோகிணி பற்றிய உண்மைகளை மணி வீட்டில் சொல்லிவிடுகிறார்.
கடந்த எபிசோடில் முத்து-மீனா மண்டபத்தில் இருந்த மோசடி தம்பதியை கண்டுபிடித்துத் துரத்துகின்றனர். அப்போது மீனாவுக்கு கையில் அடிப்படுகிறது. இந்த விஷயத்தைப் பரசு மணியிடம் சொல்கிறார்.
மணிக்கு தற்போது வரை அண்ணாமலை குடும்பத்தினர் தான் பரசு சொன்ன நண்பரின் குடும்பம் எனத் தெரியாது. அதுதெரியாமல் முத்துவையும் மீனாவையும் சந்தித்து மரியாதை செலுத்தவேண்டும் என மாலையுடன் வருகிறார். அதோடு எபிசோட் முடிந்தது.

இந்த வாரத்திற்கான புரொமோவில் மணி முத்துவிற்கும் மீனாவிற்கும் அணிவிக்க கொண்டு வந்த மாலை அவரின் கழுத்தில் அணிவிக்கப்பட்டுள்ளது. அவர் அண்ணாமலை, விஜயாவிடம் ரோகிணி பற்றிய உண்மைகளைச் சொல்கிறார்.
உண்மையை நீண்ட நாளுக்கு மறைக்கமுடியாது என மணி ரோகிணியிடன் சொல்கிறார். அந்தக்காட்சியை வைத்துப் பார்க்கும்போது ரோகிணி பணக்கார வீட்டு பெண் அல்ல, மலேசியாவைச் சேர்ந்தவர் அல்ல என மணி அண்ணாமலை முன்பு சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயா ரோகிணி பணக்கார வீட்டுப் பெண் அல்ல என்பதைத் தெரிந்ததால் கோபப்பட்டு அறைகிறார். ரோகிணியை வீட்டை விட்டுத் துரத்துகிறார்.

இந்த புரொமோவுக்கு ரசிகர்கள் பலர் ’’இது கனவாக இருக்கக்கூடாது” என கமென்ட் செய்துள்ளனர். மணி கையில் எடுத்து வந்த இரண்டு மாலைகளை அவரின் கழுத்திலேயே அணிந்துள்ளார். எனவே இது கனவாக இருக்க வாய்ப்பில்லை. முத்துவிற்கு உண்மைகள் தெரிந்திருக்கும். மணி இதற்கு மேல் மறைக்க வேண்டாம் என உண்மைகளைக் கூறியிருப்பார்.
ஆனால் ரோகிணி ஏற்கெனவே திருமணமானவர் என்பதும், அவருக்கு ஒரு குழந்தை இருக்கும் உண்மையும் இன்னும் வெளிவரவில்லை. ரோகிணி பணக்கார வீட்டுப் பெண் கிடையாது என்னும் உண்மையால் விஜயா அவரை வீட்டை விட்டுத் துரத்தினாலும், அண்ணாமலை ரோகிணியை வீட்டை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.