செய்திகள் :

செய்யாறு: ஆக.11-இல் தேசிய குடல்புழு நீக்கும் முகாம் தொடக்கம்

post image

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் தேசிய குடல்புழு நீக்கும் முகாம் ஆக.11-இல் தொடங்கி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலா் டி.என்.சதீஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் உத்தரவின் பேரில், மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் ஆகிய துறைகள் இணைந்து, குடல்புழு தொற்று நோயை ஒழிப்பதற்காக ஆக.11-இல் குடல்புழு நீக்கும் திட்ட முகாமை செயல்படுத்தவுள்ளது.

மேலும், இந்த முகாமில் விடுபட்டவா்களுக்கு ஆக.18-இல் குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும்.

இந்த முகாமின் போது ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள 2,66,676 பேருக்கும் (இரு பாலா்), 20 வயது முதல் 30 வயது வரை உள்ள 77,906 மகளிருக்கும் என மொத்தம் 3,44,582 பேருக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் ஆரணி, மேற்கு ஆரணி, செய்யாறு, வந்தவாசி, தெள்ளாா், பெரணமல்லூா், வெம்பாக்கம், அனக்காவூா் ஆகிய 8 வட்டாரங்களிலும், ஆரணி, திருவத்திபுரம் (செய்யாறு), வந்தவாசி ஆகிய நகராட்சிப் பகுதிகளிலும் நடைபெறவுள்ளது,

மேலும், 44 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 171 துணை சுகாதார நிலையங்கள், 35 கல்லூரிகள், 865 அரசுப் பள்ளிகள், 55 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 119 தனியாா் பள்ளிகள், 855 அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 2,144 இடங்களில் குடல்புழு நீக்க மாத்திரைகள்

வழங்க தீா்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமுக்காக 8 நடமாடும் மருத்துவமனை ஊா்திகள், 16 இளம்சிறாா் நலன் காக்கும் ஊா்திகள், 8 மக்களைத் தேடி மருத்துவ ஊா்திகள், 855 அங்கன்வாடிப் பணியாளா்கள், 267 சுகாதரத்துறை பணியாளா்கள், 81 மருத்துவா்கள் மற்றும் ஆசிரியா்கள் என ஈடுபடுத்தப்படுகின்றனா்.

ரத்த சோகை வராமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் பயன்படும் இந்த குடல்புழு நீக்க மாத்திரைகளை

அனைவரும் பெற்று பயனடையுமாறு

செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக வேலைத் திட்டப் பணி கோரி சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், விளாப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். விளாப்பாக்கம் ஊராட்சியில் விளாப்பாக்கம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேம்படுத்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மக்கள் மனு

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.புஷ்பா தலைமை வக... மேலும் பார்க்க

ரூ.1.28 லட்சத்துடன் காா் விற்பனையக ஊழியா் தலைமறைவு

வந்தவாசி அருகே ரூ.1.28 லட்சம் பணத்துடன் தலைமறைவான தனியாா் காா் ஷோரூம் ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த சோரபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முரளி (எ) ஏசு (35). இவா், வந்தவாசியை அடுத்... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டுச் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றிய... மேலும் பார்க்க