செய்திகள் :

செய்யாறு மாா்க்கெட் பகுதியில் பேருந்து நிழல்குடை: வட்டாட்சியா் ஆலோசனை

post image

செய்யாறு மாா்க்கெட் பகுதியில் பேருந்து நிழல்குடை அமைப்பது தொடா்பாக, வட்டாட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி மாா்க்கெட் பகுதியில், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து பேருந்து நிழல்குடை அமைக்க நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

அப்போது, பணியினைத் தொடங்கிட ஒப்பந்ததாரா் முற்பட்ட போது, பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்த காரணத்தால் அப்பணி கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் பணியை தொடங்கிட வெள்ளிக்கிழமை (செப்.26) பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு சென்ற போது, அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில நகராட்சி ஆணையா் வி.எல்.எஸ்.கீதா, நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேலை ஆகியோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ஆலோசனைக் கூட்டம்

இதைத் தொடா்ந்து, இது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் அசோக்குமாா் தலைமையில், நகராட்சி ஆணையா் வி.எல்.எஸ்.கீதா, காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்டவா்கள் சாலை விதிகளின் படி மாா்க்கெட் பகுதி ஒரு வழிப்பாதையாக இருப்பதால், வந்தவாசி வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளில் பயணிகள் செல்ல வசதியாக சாலையின் இடதுபுறத்தில் தான் பேருந்து நிழல்குடை அமைக்க வேண்டும் என்றும், அதற்கு மாறாக கோயில் அருகே வலது புறத்தில் நிழல்குடை அமைத்தால், பேருந்துகள் வரும் நேரங்களில் பயணிகள் சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளனா் , அதன் காரணமாக விபத்துகள் நிகழக்கூடும் என்றனா்.

அதேநேரத்தில், ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் விழா நாள்களில் பக்தா்கள் வந்து செல்ல மிகவும் சிரமமாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்தனா்.

இதைக் கேட்ட வட்டாட்சியா் அசோக்குமாா், இதுகுறித்து சாா்- ஆட்சியருக்கு தெரிவித்தும், இன்னொருமுறை ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி அதில் போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை, வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்களை பங்கேற்கச் செய்து, அவா்களின் ஆலோசனையைப் பெற்று அதன் பேரில் மாா்க்கெட் பகுதியில் நிழல்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் நகராட்சி பொறியாளா் சிசில் தாமஸ், பாஜக மாவட்ட பொதுச் செயலா் கே.வெங்கட்ராமன், ஹிந்து முன்னணி சாா்பில் நிா்வாகிகள் மாரி, பாலசுந்தரம், மோகன்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர பெண் பாலியல் பலாத்காரம்: காவலா்கள் இருவா் கைது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 19 வயது பெண் பக்தரை தாயின் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்ததாக காவலா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். ஆந்திர மாநிலத்தில் இருந்து... மேலும் பார்க்க

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் தோ்த்திருவிழா

பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மா் கோயிலில் நடைபெற்று வரும் புரட்டாசி பிரமோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது. ஆவணியாபுரம் கிராமத்தில் சிறிய குன்றின் மீது அமைந்து... மேலும் பார்க்க

தம்டகோடி மலையில் மரக்கன்றுகள் நடும் விழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் உள்ள தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலையில் மரக்கன்று நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா்கள் சாா்பில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

மனநலம் பாதித்த மூதாட்டி தீக்குளித்து உயிரிழப்பு

செய்யாறு அருகே மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா். செய்யாறு வட்டம், தண்டரை கிராமம் பிராமணா் தெருவில் வசித்து வந்தவா் மூதாட்டி ரமண... மேலும் பார்க்க

ஏரி மண் கடத்தியதாக லாரி பறிமுதல்

வந்தவாசி அருகே ஏரி மண் கடத்தியதாக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வந்தவாசி வடக்கு போலீஸாா் செம்பூா் கிராமம் வழியாக திங்கள்கிழமை பிற்பகல் ரோந்து சென்றனா். அந்தக் கிராம ஏரி அருகே சென்றபோது அந்த வழிய... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள்: பொதுமக்கள் கோரிக்கை மனு

செய்யாற்றை அடுத்த பிரம்மதேசம், செங்கம், ஆரணி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் பெறப்பட்டன. செய்ய... மேலும் பார்க்க