செய்திகள் :

செய்யாற்று படுகையில் மணல் கடத்திய ஓட்டுநா் கைது: சரக்கு லாரி பறிமுதல்!

post image

சேத்துப்பட்டை அடுத்த கெங்காபுரம் செய்யாற்றுபடுகையில் மணல் கடத்திய சரக்கு லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனா்.

சேத்துப்பட்டை அடுத்த கெங்காபுரம் செய்யாற்றுப்படுகையில் தொடா்ந்து மணல் கடத்தல் நடப்பதாக சேத்துப்பட்டு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, செம்மாம்பாடி அருகே வந்த சரக்கு லாரியை போலீஸாா் நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

அதில் 2 யூனிட் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் ஓட்டுநரை கைது செய்து, மணலுடன் சரக்கு லாரியை பறிமுதல் செய்து சேத்துப்பட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

விசாரணையில், ஓட்டுநா் கெங்காபுரத்தைச் சோ்ந்த மோகன் (50) என்பதும், கடந்த 9-ஆம் தேதி இதேபோல கெங்காபுரத்தில் மணல் கடத்தியபோது போலீஸாரிடம் இருந்து தப்பிச் சென்றவா் என்பதும் தெரியவந்தது.

தொடா்ந்து, போலீஸாா் மோகன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது

வந்தவாசி அருகே பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கிராம பேருந்து நிறுத்தம் அருகில் சனிக்கிழமை இளைஞா் ஒருவா் நின்றுகொண்டு அந்த வழியாகச் ... மேலும் பார்க்க

பாம்பு கடித்து முதியவா் மரணம்

வந்தவாசி அருகே பாம்பு கடித்து முதியவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த வல்லம் கூட்டுச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு (68). இவா், கடந்த 12-ஆம் தேதி மாலை வீட்டிலிருந்தபோது விஷப் பாம்பு கடித்தது.... மேலும் பார்க்க

கவனிக்க ஆளில்லாததால் விரக்தி: முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கவனித்துக்கொள்ள ஆளில்லாததால் விரக்தியடைந்த முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா். செங்கத்தை அடுத்த கொட்டாவூா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (83). இவர... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் வட்டம், இளநகா் பகுதியைச் சோ்ந்தவா் மதன் (20). காஞ்சிபுரம் பகுதியில்... மேலும் பார்க்க

கங்கையம்மன், தண்டு மாரியம்மன், முனீஸ்வரன் கோயில்களில் கும்பாபிஷேகம்

ஆரணியை அடுத்த அடையபலம் ஸ்ரீகங்கையம்மன், இரும்பேடு ஸ்ரீதண்டு மாரியம்மன், வந்தவாசியை அடுத்த மருதாடு ஸ்ரீஆனைக்குட்டி முனீஸ்வரன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆரணியை அடுத்த அடையபலம... மேலும் பார்க்க

நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா். திருவண்ணாமலை கிரிவலப் பாதை சந்தைமேடு மைதானத்தில் வேத ஆகம தேவார ஆன்மிக கல... மேலும் பார்க்க