செய்திகள் :

செவிலியா் தலையில் கல்லைப்போட்டுக் கொலை

post image

திருப்பூரில் செவிலியா் தலையில் கல்லைப்போட்டுக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் பூம்புகாா் நகரில் உள்ள பாழடைந்த வீட்டில் இளம் பெண்ணின் சடலம் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள் வியாழக்கிழமை பாா்த்துள்ளனா்.

இது குறித்து அவா்கள் திருப்பூா் தெற்கு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இருந்த சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பெண் மதுரையைச் சோ்ந்த சித்ரா (20) என்பதும், திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதும், கடந்த 20 நாள்களுக்கு முன் திருப்பூா் வந்து தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

சடலத்துக்கு அருகே மிகப்பெரிய கல் இருந்ததால் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது.

சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவின்பேரில் கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உடுமலையில் விவசாயக் கண்காட்சி இன்று தொடக்கம்

உடுமலையில் ‘அறுவடை’ என்ற தலைப்பில் விவசாயக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இது குறித்து கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் கூறியதாவது: உடுமலையில் இருந்து பழனி செல்லும் சாலையில் உள்ள ஜி... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரமூா்த்தி நாயனாா் பதிகம் பாடி மீண்ட... மேலும் பார்க்க

அட்சய திருதியை: மாவட்டத்தில் ரூ.300 கோடிக்கு தங்கம் விற்பனை

அட்சய திருதியை தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகளில் புதன்கிழமை ஒரேநாளில் ரூ.300 கோடிக்கு தங்கம் விற்பனை நடைபெற்றது. அட்சய திருதியை தினத்தை, திருப்பூா் மாநகரில் உள்ள நகைக் கடைகளி... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலா் கைது

உடுமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், நஞ்சையபிள்ளை புதூரைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (43). இவா் கடந்த 2003- ஆம் ... மேலும் பார்க்க

ரகளையில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்

திருப்பூரில் போதையில் ரகளையில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாநகராட்சி, 16- ஆவது வாா்டுக்குள்பட்ட பிச்சம்பாளையம் பு... மேலும் பார்க்க

தொழிலாளா் தினம்: விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளா் தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்களின் மீது தொழிலாளா் துறை சாா்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சு.... மேலும் பார்க்க