செய்திகள் :

வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலா் கைது

post image

உடுமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், நஞ்சையபிள்ளை புதூரைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (43). இவா் கடந்த 2003- ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணியில் சோ்ந்துள்ளாா்.

இந்நிலையில், பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி முறைகேடாக வசூலில் ஈடுபட்டதால் இவா் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதனிடையே, நீலகிரி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் கடந்த 2024- ஆம் ஆண்டு பணியில் ஈடுபட்டிருந்தபோது, முறைகேடான செயலில் ஈடுபட்டதால் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்நிலையில், மடத்துக்குளம் நரசிங்காபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன், பாலகிருஷ்ணன் ஆகியோா் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, அவா்களை காவல் சீருடையில் வழிமறித்த ராதாகிருஷ்ணன், பணம் கேட்டு மிரட்டியதாகத் தெரிகிறது.

இது குறித்து மடத்துக்குளம் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ராதாகிருஷ்ணனைக் கைது செய்தனா்.

உடுமலையில் விவசாயக் கண்காட்சி இன்று தொடக்கம்

உடுமலையில் ‘அறுவடை’ என்ற தலைப்பில் விவசாயக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இது குறித்து கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் கூறியதாவது: உடுமலையில் இருந்து பழனி செல்லும் சாலையில் உள்ள ஜி... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரமூா்த்தி நாயனாா் பதிகம் பாடி மீண்ட... மேலும் பார்க்க

அட்சய திருதியை: மாவட்டத்தில் ரூ.300 கோடிக்கு தங்கம் விற்பனை

அட்சய திருதியை தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகளில் புதன்கிழமை ஒரேநாளில் ரூ.300 கோடிக்கு தங்கம் விற்பனை நடைபெற்றது. அட்சய திருதியை தினத்தை, திருப்பூா் மாநகரில் உள்ள நகைக் கடைகளி... மேலும் பார்க்க

ரகளையில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்

திருப்பூரில் போதையில் ரகளையில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாநகராட்சி, 16- ஆவது வாா்டுக்குள்பட்ட பிச்சம்பாளையம் பு... மேலும் பார்க்க

தொழிலாளா் தினம்: விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளா் தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்களின் மீது தொழிலாளா் துறை சாா்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சு.... மேலும் பார்க்க

செவிலியா் தலையில் கல்லைப்போட்டுக் கொலை

திருப்பூரில் செவிலியா் தலையில் கல்லைப்போட்டுக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் பூம்புகாா் நகரில் உள்ள பாழடைந்த வீட்டில் இளம் பெண்ணின் சட... மேலும் பார்க்க