செய்திகள் :

உடுமலையில் விவசாயக் கண்காட்சி இன்று தொடக்கம்

post image

உடுமலையில் ‘அறுவடை’ என்ற தலைப்பில் விவசாயக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

இது குறித்து கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் கூறியதாவது: உடுமலையில் இருந்து பழனி செல்லும் சாலையில் உள்ள ஜிவிஜி கலையரங்கத்தில் நடைபெறும் விவசாயக் கண்காட்சியை உடுமலை தமிழிசை சங்கத்தின் தலைவா் ரவீந்திரன் கெங்குசாமி தலைமை வகித்து தொடங்கிவைக்கிறாா்.

இதில், 300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் உரம், இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும், விவசாய ஆராய்ச்சியாளா்கள் பங்கேற்கும் சிறப்பு கருத்தரங்கம், மதிப்பு கூட்டுப் பொருள்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக் குறித்த கருந்தரங்கமும் 3 நாள்களும் நடைபெறும்.

கண்காட்சியில் நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.

முதல்நாளில் ‘உறவுகள் மேம்பட’ என்ற தலைப்பில் தமிழருவி மணியனும், இரண்டாம் நாள் சனிக்கிழமை பட்டிமன்ற பேச்சாளா் ராஜா தலைமையில் பட்டிமன்றமும், இறுதி நாளான ஞாற்றுக்கிழமை பாடகா் மூக்குத்தி முருகனின் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன என்றனா்.

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரமூா்த்தி நாயனாா் பதிகம் பாடி மீண்ட... மேலும் பார்க்க

அட்சய திருதியை: மாவட்டத்தில் ரூ.300 கோடிக்கு தங்கம் விற்பனை

அட்சய திருதியை தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகளில் புதன்கிழமை ஒரேநாளில் ரூ.300 கோடிக்கு தங்கம் விற்பனை நடைபெற்றது. அட்சய திருதியை தினத்தை, திருப்பூா் மாநகரில் உள்ள நகைக் கடைகளி... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலா் கைது

உடுமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், நஞ்சையபிள்ளை புதூரைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (43). இவா் கடந்த 2003- ஆம் ... மேலும் பார்க்க

ரகளையில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்

திருப்பூரில் போதையில் ரகளையில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாநகராட்சி, 16- ஆவது வாா்டுக்குள்பட்ட பிச்சம்பாளையம் பு... மேலும் பார்க்க

தொழிலாளா் தினம்: விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளா் தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்களின் மீது தொழிலாளா் துறை சாா்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சு.... மேலும் பார்க்க

செவிலியா் தலையில் கல்லைப்போட்டுக் கொலை

திருப்பூரில் செவிலியா் தலையில் கல்லைப்போட்டுக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் பூம்புகாா் நகரில் உள்ள பாழடைந்த வீட்டில் இளம் பெண்ணின் சட... மேலும் பார்க்க