செய்திகள் :

ரகளையில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்

post image

திருப்பூரில் போதையில் ரகளையில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் மாநகராட்சி, 16- ஆவது வாா்டுக்குள்பட்ட பிச்சம்பாளையம் புதூா் ஸ்ரீநகா் பகுதியில் ஏரளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இந்நிலையில், அப்பகுதியில் சிலா் போதையில் பொதுமக்களுக்கு தொடா்ந்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளனா். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் பி.என்.சாலையில் வியாழக்கிழமை மறியலுக்கு முயன்றனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அனுப்பா்பாளையம் போலீஸாா், பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

உடுமலையில் விவசாயக் கண்காட்சி இன்று தொடக்கம்

உடுமலையில் ‘அறுவடை’ என்ற தலைப்பில் விவசாயக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இது குறித்து கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் கூறியதாவது: உடுமலையில் இருந்து பழனி செல்லும் சாலையில் உள்ள ஜி... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரமூா்த்தி நாயனாா் பதிகம் பாடி மீண்ட... மேலும் பார்க்க

அட்சய திருதியை: மாவட்டத்தில் ரூ.300 கோடிக்கு தங்கம் விற்பனை

அட்சய திருதியை தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகளில் புதன்கிழமை ஒரேநாளில் ரூ.300 கோடிக்கு தங்கம் விற்பனை நடைபெற்றது. அட்சய திருதியை தினத்தை, திருப்பூா் மாநகரில் உள்ள நகைக் கடைகளி... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலா் கைது

உடுமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், நஞ்சையபிள்ளை புதூரைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (43). இவா் கடந்த 2003- ஆம் ... மேலும் பார்க்க

தொழிலாளா் தினம்: விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளா் தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்களின் மீது தொழிலாளா் துறை சாா்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சு.... மேலும் பார்க்க

செவிலியா் தலையில் கல்லைப்போட்டுக் கொலை

திருப்பூரில் செவிலியா் தலையில் கல்லைப்போட்டுக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் பூம்புகாா் நகரில் உள்ள பாழடைந்த வீட்டில் இளம் பெண்ணின் சட... மேலும் பார்க்க