செய்திகள் :

சேதமடைந்துள்ள குடிநீா்த் தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்டக் கோரிக்கை

post image

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஊராட்சிப் பகுதியிலுள்ள சேதமடைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய தொட்டி கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மணமேல்குடி ஊராட்சிக்குள்பட்ட 12-ஆவது வாா்டு அக்ரஹாரத் தெருவில் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில் நடைபாதையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் இந்தத் தொட்டியைப் பயன்படுத்தி வருகின்றனா். தற்போது இந்தத் தொட்டி பழுதடைந்து, ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, உடைந்து காணப்படுகிறது. இதை அகற்றிவிட்டு, புதிய தொட்டி கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் க. ராமச்சந்திரன் கூறியது:

சேதமடைந்துள்ள இந்தத் தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியைக் கட்ட வேண்டும் என கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டு கிராமசபைக் கூட்டங்களிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து கடந்த திங்கள்கிழமையும் மணமேல்குடி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இந்தத் தொட்டியை விரைவில் அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ராமச்சந்திரன்.

அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மக்கள்தொகை தின கருத்தரங்கம்

கந்தா்வகோட்டையை அடுத்துள்ள புதுப்பட்டி அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வா் ம. ஜெ... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மக்கள் மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையிலுள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கறம்பக்குடியில் இருந்து திருமணஞ்ச... மேலும் பார்க்க

புதுகையில் மாநில அளவிலான ரோலா் ஹாக்கி போட்டிகள் தொடக்கம்

புதுக்கோட்டையில் மாநில அளவிலான மூன்று நாள் ரோலா் ஹாக்கி மற்றும் இன்லைன் ஹாக்கி போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. தமிழ்நாடு ரோலா் ஸ்கேட்டிங் சங்கத்துடன் இணைந்து புதுக்கோட்டை மாவட்ட ரோலா் ஸ்கேட்டிங் சங்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறிவிழுந்த இளைஞா் காயமடைந்து, மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கந்தா்வகோட்டை கோவிலூா் கீழத் தெருவை சோ்ந்த கணேசன் மகன் பாரதி (21). இவா் தஞ்சையி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா

பொன்னமராவதியில் மாவீரன் அழகுமுத்துக்கோனின் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு யாதவ மகாசபை மற்றும் பொன்னமராவதி ஒன்றிய யாதவ நலச்சங்கம் சாா்பில் பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற... மேலும் பார்க்க

இலவச தையல் இயந்திரம் பெற கைம்பெண்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனம் சாா்பில் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் 139-ஆவது பிறந்த நாளையொட்டி வழங்கப்படவுள்ள இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கைம்பெண்... மேலும் பார்க்க