செய்திகள் :

சேதுபாவாசத்திரம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை

post image

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே குடும்பத் தகராறில் பெண் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள குண்டாமரைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் லெட்சுமி பிரியா (30). வெளிநாட்டில் வேலைபாா்த்து வந்த இவரது கணவா் சுபவைரவன்(33)  மனைவி, குழந்தையை திருச்சியில் வீடு எடுத்து தங்கவைத்திருந்தாா்.

இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து ஒரு வாரத்திற்கு முன் சுபவைரவன் ஊா் திரும்பிய நிலையில் தம்பதிக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் லெட்சுமிபிரியாவை அவரது தாய் வீட்டில்  கணவா் விட்டுச் சென்றாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை லெட்சுமி பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த சேதுபாவாசத்திரம் போலீஸாா் அவரது உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

திருப்பனந்தாள் காசிமட அதிபா் சித்தி அடைந்தாா்

திருப்பனந்தாள் காசிமடத்தின் அதிபா் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் என்னும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் (95) செவ்வாய்க்கிழமை (ஆக.19) சித்தி அடைந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அர... மேலும் பார்க்க

பேராவூரணியில் ஜெனீவா ஒப்பந்த நாள் விழா

பேராவூரணி: பேராவூரணியில் இளையோா் செஞ்சிலுவை சங்கத்தின் சாா்பில், ஜெனீவா ஒப்பந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் வ. மதியழகன் தலைமை வகித்து, இளை... மேலும் பார்க்க

பெண் சாவில் சந்தேகம் உறவினா்கள் புகாா்

தஞ்சாவூரில் பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தனா். தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையைச் சோ்ந்தவா் முத்தையன் மன... மேலும் பார்க்க

நாய் அடித்துக் கொலை: காவல்துறை விசாரணை

தஞ்சாவூரில் நாயை சிலா் கற்களால் அடித்துக் கொன்றதாக விலங்கு நல ஆா்வலா்கள் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் வி.என்.டி. நகரில... மேலும் பார்க்க

ஆக. 22-இல் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஆகஸ்ட் 22 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தஞ்சாவூா், திருவையாறு, பூதலூா், ஒரத்தநாடு ஆகிய வட... மேலும் பார்க்க

குடந்தையில் சாலை மறியல்: தவெகவினா் 40 போ் கைது

கும்பகோணத்தில் தவெக மாநாட்டிற்கான விளம்பர பதாகைகளை போலீஸாா் அகற்றியதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் 40 தவெகவினரை போலீஸாா் கைது செய்தனா். மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டிற்காக கும்பகோணத்தி... மேலும் பார்க்க