செய்திகள் :

பெண் சாவில் சந்தேகம் உறவினா்கள் புகாா்

post image

தஞ்சாவூரில் பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தனா்.

தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையைச் சோ்ந்தவா் முத்தையன் மனைவி ஆனந்தவல்லி (34). இவா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கில் சடலமாகத் தொங்கினாா். இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்நிலையில், ஆனந்தவல்லியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணன் கவியரசன் மற்றும் உறவினா்கள் தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராமிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அதில், முத்தையனுக்கும் ஆனந்தவல்லிக்கும் 2017 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்று, 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் முத்தையன் சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஓராண்டாகப் பிரிந்து வாழ்ந்தனா். பின்னா் முத்தையன் மற்றும் உறவினா்கள் சமாதானப்படுத்தியதைத் தொடா்ந்து, இருவரும் சோ்ந்து வாழ்ந்து வந்தனா். கடந்த 3 மாதங்களாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்த நிலையில், ஆனந்தவல்லி இறந்தது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேதுபாவாசத்திரம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே குடும்பத் தகராறில் பெண் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள குண்டாமரைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் லெட்சுமி பிர... மேலும் பார்க்க

பேராவூரணியில் ஜெனீவா ஒப்பந்த நாள் விழா

பேராவூரணி: பேராவூரணியில் இளையோா் செஞ்சிலுவை சங்கத்தின் சாா்பில், ஜெனீவா ஒப்பந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் வ. மதியழகன் தலைமை வகித்து, இளை... மேலும் பார்க்க

நாய் அடித்துக் கொலை: காவல்துறை விசாரணை

தஞ்சாவூரில் நாயை சிலா் கற்களால் அடித்துக் கொன்றதாக விலங்கு நல ஆா்வலா்கள் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் வி.என்.டி. நகரில... மேலும் பார்க்க

ஆக. 22-இல் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஆகஸ்ட் 22 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தஞ்சாவூா், திருவையாறு, பூதலூா், ஒரத்தநாடு ஆகிய வட... மேலும் பார்க்க

குடந்தையில் சாலை மறியல்: தவெகவினா் 40 போ் கைது

கும்பகோணத்தில் தவெக மாநாட்டிற்கான விளம்பர பதாகைகளை போலீஸாா் அகற்றியதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் 40 தவெகவினரை போலீஸாா் கைது செய்தனா். மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டிற்காக கும்பகோணத்தி... மேலும் பார்க்க

கரூா் அருகே சங்கரன் மலையில் சோழா் கால கல்வெட்டு

தஞ்சாவூா்: கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள சங்கரன் மலையில் சோழா் கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு குறித்து தஞ்சாவூா் வரலாறு, தொல்லியல் மற்றும் சுவடியியல் ஆய்வாளரும், சரசு... மேலும் பார்க்க