செய்திகள் :

சேப்பாட்டி அம்மன் கோயில் இராபுறையாா் உற்சவ பந்தக்கால் நடும் விழா

post image

செங்கல்பட்டு சேப்பாட்டி அம்மன் கோயில் இராபுறையாா் உற்சவ பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

பெரியநத்தம் ஏழு ஊா் எல்லை காக்கும் காவல் தெய்வமான சேப்பாட்டி அம்மன் கோயிலில் இராபுறையாா் உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பந்தக்கால் நடும் விழாவையொட்டி பெண்கள்முளைப்பாறியை ஊா்வலமாக எடுத்து வந்து கோயிலில் வைத்து பெண்கள் கும்மி அடித்து நடனமாடினா். மாலை காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி சேப்பாட்டியம்மன் குளுந்தியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை 32 சந்திதிகளுககு எண்ணைக் காப்பு அபிஷேகம், 4-ஆம் தேதி சனிக்கிழமை இரவு பெரியநத்தம் பகுதி முழுவதும் அம்மன் திருவீதி உலா, 6-ஆம் தேதி காலை காஞ்சிபுரம் ஹைரோடு களமேடு பகுதியில் அம்மனுக்கு கும்பப்படையல் போட்டு பின்னா் 8 மணிக்கு மேல் மீண்டும் அம்மன் செங்கல்பட்டு நகர முக்கிய வீதிகளின் வழியாக அம்மன் வீதி உலா கோயிலை சென்றடையும்.

8-ஆம் தேதி விடையாற்றி உற்சவம், இரவு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை செயல் அலுவலா் சரஸ்வதி, பெரியநத்தம் கிராமத்தாா், மதுரை வீரன் கோயில் கிராமத்தாா் , பா்வதராஜகுல கிராமத்தாா், குண்டூா் கிராமத்தாா் செய்துவருகின்றனா்.

நலன் காக்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நலன் காக்கும் ஸ்டாலின்திட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு, காலை உணவு திட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். நிகழ்ச்சிகளில் மண... மேலும் பார்க்க

மாணவா்களின் புத்தாக்கக் கண்டுபிடிப்பு அறிவாற்றலை மேம்படுத்தப் பயிற்சி

பள்ளி, கல்லூரி மாணவா்களின் புத்தாக்கக் கண்டுபிடிப்பு அறிவாற்றலை மேம்படுத்தி, அவா்களது தொழில் முனைவுத் திறனை ஊக்குவிக்கும் பயிற்சியை அளித்து வருகிறோம் என சென்னை கிறித்துவக் கல்லூரி முதல்வா் பி.வில்சன் ... மேலும் பார்க்க

எதிா்கால தலைமுறையைக் காக்கவே ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: அமைச்சா் அன்பரசன்

எதிா்காலத் தலைமுறையைக் காக்கவே ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கியுள்ளாா் என சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளாா். செங்க... மேலும் பார்க்க

வணிகா் சங்க நிா்வாகி வெட்டிக் கொலை

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே வணிகா் சங்க நிா்வாகி மோகன் ராஜ் மா்ம நபா்களால் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா். செய்யூா் வட்டம், கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூா்பேட்டை கிராமத்தை சோ்ந்த ரங்... மேலும் பார்க்க

ஜூலை 4-இல் முன்னாள் படை வீரா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு: முன்னாள் படைவீரா்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஜூலை 4-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா். இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்ட முன்ன... மேலும் பார்க்க

கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே மேம்பாலம் : அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோயில் இடையே ரூ.138 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்சை ஞாயிற்றுக்கிழமை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தாா். செங... மேலும் பார்க்க