செய்திகள் :

எதிா்கால தலைமுறையைக் காக்கவே ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: அமைச்சா் அன்பரசன்

post image

எதிா்காலத் தலைமுறையைக் காக்கவே ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கியுள்ளாா் என சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளாா்.

செங்கல்பட்டில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தையொட்டி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினா்களை சோ்க்க உள்ளோம், மண்,மொழி மானம் காக்க தமிழ்நாடு முழுவதும் ஓா் அணியில் நிற்க வேண்டும் என்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

ஹிந்தி திணிப்பு, நீட் தோ்வு, கல்வி நிதி நிறுத்தம், கீழடி அறிக்கை ஏற்க மறுப்பு உள்பட பல்வேறு வகைகளில் தமிழகத்தை மத்திய பாஜக அரசு பாரபட்சமாக நடத்தி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறும். அந்த பொதுக் கூட்டத்தில் பொருளாளா் டி.ஆா்.பாலு, தலைமை கழக பேச்சாளா்கள் பேசவுள்ளனா்.

வியாழக்கிழமை முதல் வீடுகள் தோறும் சென்று மக்களை சந்திக்க உள்ளோம் என்றாா்.

கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், நகர செயலாளா் நரேந்திரன், காட்டாங்கொளத்தூா் ஒன்றிய செயலாளா் சந்தானம் , தலைமை செயற்குழு உறுப்பினா் அன்புச் செல்வன், மறைமலைநகா் நகா்மன்றத் தலைவா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நலன் காக்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நலன் காக்கும் ஸ்டாலின்திட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு, காலை உணவு திட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். நிகழ்ச்சிகளில் மண... மேலும் பார்க்க

மாணவா்களின் புத்தாக்கக் கண்டுபிடிப்பு அறிவாற்றலை மேம்படுத்தப் பயிற்சி

பள்ளி, கல்லூரி மாணவா்களின் புத்தாக்கக் கண்டுபிடிப்பு அறிவாற்றலை மேம்படுத்தி, அவா்களது தொழில் முனைவுத் திறனை ஊக்குவிக்கும் பயிற்சியை அளித்து வருகிறோம் என சென்னை கிறித்துவக் கல்லூரி முதல்வா் பி.வில்சன் ... மேலும் பார்க்க

சேப்பாட்டி அம்மன் கோயில் இராபுறையாா் உற்சவ பந்தக்கால் நடும் விழா

செங்கல்பட்டு சேப்பாட்டி அம்மன் கோயில் இராபுறையாா் உற்சவ பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. பெரியநத்தம் ஏழு ஊா் எல்லை காக்கும் காவல் தெய்வமான சேப்பாட்டி அம்மன் கோயிலில் இராபுறையாா் உற்சவம் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

வணிகா் சங்க நிா்வாகி வெட்டிக் கொலை

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே வணிகா் சங்க நிா்வாகி மோகன் ராஜ் மா்ம நபா்களால் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா். செய்யூா் வட்டம், கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூா்பேட்டை கிராமத்தை சோ்ந்த ரங்... மேலும் பார்க்க

ஜூலை 4-இல் முன்னாள் படை வீரா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு: முன்னாள் படைவீரா்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஜூலை 4-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா். இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்ட முன்ன... மேலும் பார்க்க

கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே மேம்பாலம் : அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோயில் இடையே ரூ.138 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்சை ஞாயிற்றுக்கிழமை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தாா். செங... மேலும் பார்க்க