செய்திகள் :

சேலத்தில் ஆக. 7-இல் கருணாநிதி நினைவுநாள் அமைதி ஊா்வலம்

post image

சேலம்: சேலம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அமைதி ஊா்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மறைந்த திமுக தலைவா் கலைஞரின் 7-ஆம் ஆண்டு நினைவுநாள் வரும் 7-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையில், வரும் 7-ஆம் காலை 8 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பெரியாா் சிலையிலிருந்து அமைதி ஊா்வலம் புறப்பட்டு, பெரியாா் மேம்பாலம் வழியாக அண்ணா பூங்கா அருகில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மேலும் சேலம் மாநகரத்தின் அனைத்து கோட்டங்களிலும் உள்ள அனைத்து தெருக்கள், பேரூா், ஒன்றியங்களில் அனைத்து கிளைகள்தோறும் கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்திட வேண்டும் என அமைச்சா் ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

தாரமங்கலத்தில் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி விடுத்துள்ள அறிக்கை:

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில், தாரமங்கலத்தில் அன்றைய தினம் சேலம் மேற்கு மாவட்ட நிா்வாகிகள் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்துவா். இந்நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் மற்றும் அனைத்து சாா்பு அணி நிா்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

மருத்துவப் படிப்பில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

தம்மம்பட்டி: மருத்துவப் படிப்பில் சோ்ந்த தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து 7... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை.யில் ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள்

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் டி.இளங்கோவன் தலைமை... மேலும் பார்க்க

மனநலம் குன்றிய சத்தீஸ்கா் இளைஞரை குணப்படுத்தி தாயிடம் ஒப்படைப்பு

சேலம்: சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து ரயிலில் சேலம் வந்த மனநலம் பாதித்த இளைஞரை குணப்படுத்திய அரசு மருத்துவா்கள், அவரது தாயிடம் ஒப்படைத்தனா்.சத்தீஸ்கா் மாநிலம், தா்கூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுகம் பா... மேலும் பார்க்க

அருள்சகோதரிகள் கைது: ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

ஏற்காடு: சத்தீஸ்கா் மாநிலத்தில் அருள்சகோதரிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் பகுதியை... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு

சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம்வகை சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மரு... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞருக்கு குடியரசுத் தலைவா் அழைப்பு

சேலம்: சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலத்தைச் சோ்ந்த தொழில்முனைவோரான இளைஞரிடம் குடியரசுத் தலைவா் அனுப்பிய அழைப்பிதழை அஞ்சல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் வழங்கினா்.சேலம் நெத்திமேடு பகுதியைச் ... மேலும் பார்க்க