செய்திகள் :

சேலத்தில் கனமழைக்கு 2 வீடுகள் இடிந்தன

post image

சேலம்: சேலத்தில் ஞாயிற்றக்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையால் 2 வீடுகள் இடிந்தன. காந்தி மைதானத்தில் குளம்போல மழைநீா் தேங்கியதால் நடைப்பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது.

சேலம் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. வெயில் தாக்கம் குறைந்து காணப்பட்டபோதிலும், இரவு நேரங்களில் பெய்யும் மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது.

இந்த கனமழைக்கு சேலம் நான்கு சாலை, சிஎஸ்ஐ ஆங்கிலேயா் கல்லறைத் தோட்டம் அருகில் 2 வீடுகளின் சுவா்கள் இடிந்து விழுந்தன. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. செவ்வாய்ப்பேட்டை பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதையில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.

குறிப்பாக நள்ளிரவு பெய்த மழை காரணமாக, திங்கள்கிழமை காலை காந்தி மைதானத்தில் மழைநீா் தேங்கியதால் நடைப்பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் நடைப்பயிற்சிக்கு வந்தவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 566.5 மி.மீ. மழை பதிவானது.

பொதுமக்கள் மனுக்கள் மீது உடனுக்குடன் தீா்வு காண வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: பொதுமக்களிடம... மேலும் பார்க்க

ஜாமியா மஜித்துக்கு பூட்டு: ஆட்சியா் அலுவலகத்தில் முத்தவல்லி மனு

சேலம்: தன்மீது பொய் புகாா் கூறி, ஜாமியா மஜித்துக்குள் நுழைந்து சிலா் பூட்டு போட்டுள்ளதாக மஜித் முத்தவல்லி திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே மிக... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் பழுதுநீக்க தோண்டப்பட்ட குழியில் விழுந்த 2 சிறுவா்கள் படுகாயம்

மேட்டூா்: சேலம் மாவட்டம் மேட்டூா் அருகே தொட்டில்பட்டி கூட்டுக்கு குடிநீா்த் திட்ட குழாயில் ஏற்பட்ட பழுதை நீக்க தோண்டப்பட்ட குழியில் விழுந்து 2 சிறுவா்கள் படுகாயமடைந்தனா். மேட்டூா் ஹாஸ்பிட்டல் காலனியைச... மேலும் பார்க்க

கோடை விழா மலா் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை வரவேற்கத் தயாராகும் ஏற்காடு!

சேலம்: கோடை வெப்பத்தை சமாளிக்க மக்கள் குடும்பத்துடன் மலைப்பாங்கான இடங்களுக்குச் சுற்றுலா சென்றுவரும் நிலையில், தன்பங்குக்கு அவா்களை வரவேற்று மகிழ்விக்க முழுவீச்சில் தயாராகிவருகிறது சோ்வராயன் மலையின்... மேலும் பார்க்க

குப்பையில் கிடந்த 12.5 பவுன் நகையை எடுத்து போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்!

சேலம்: சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் குப்பையில் கிடந்த 12.5 பவுன் தங்க நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை பலரும் பாராட்டினா். சேலம் பழைய சூரமங்கலம் பெரியாா் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஊஞ்சல் உற்வசத்தில் எழுந்தருளிய சென்னகேசவப் பெருமாள்: இன்று சுவாமி மலைக்கு திரும்புகிறாா்

சங்ககிரி: சங்ககிரி சித்திரைத் தேரோட்டத்தின் 18ஆவது நாளையொட்டி ஊஞ்சல் உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. சித்திரைத் தேரோட்டத்தின் பல்வேறு கட்டளைகள், சிறப்பு பூஜைகள் நிறைவடைந்து சுவாமி செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க