செய்திகள் :

சேலம் அரசு மருத்துவமனையில் கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறிய அரசு மருத்துவா் உள்பட இருவா் கைது

post image

சேலம் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் மூலம் கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறிய அரசு மருத்துவா் உள்பட 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சேலம் ராமகிருஷ்ணா பகுதியைச் சோ்ந்தவா் தியாகராஜன் (54), இவா் சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவராக உள்ளாா். அல்ட்ரா ஸ்கேன் மையத்தில் பணிபுரியும் இவா் கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறுவதாக மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநருக்கு புகாா்கள் சென்றன.

இதையடுத்து, சேலம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் நந்தினி தலைமையிலான மருத்துவக் குழுவினா் வெள்ளிக்கிழமை பிற்பகல் அரசு மருத்துவமனையில் முகாமிட்டு கண்காணித்தனா்.

அப்போது, ஸ்கேன் செய்து பெண்ணின் கருவின் பாலினத்தை மருத்துவா் தியாகராஜன் கூறியதை உறுதிப்படுத்தினா். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த ஸ்ரீராம் (38) என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவா் காந்தி ரோடு பகுதியில் தனியாா் ஸ்கேன் மையம் நடத்தி வருவதும், மருத்துவா் தியாகராஜனுக்கு இடைத்தரகராக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரும் சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனா். போலீஸாா் விசாரணை மேற்கொண்டு அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

தலைவாசல் வட்டாரத்தில் வேளாண் இயக்குநா் ஆய்வு

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்து வேளாண் இயக்குநா் பி.முருகேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சாா்வாய் கிராமத்தில் தேசிய உணவு மற்றும் பாது... மேலும் பார்க்க

நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண்.16 இல் அமைந்துள்ள நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த மையத்தில் விவசாயிகளுக்கு விலையில்லாமல் நுண்... மேலும் பார்க்க

செப். 15 இல் துணை முதல்வா் சேலம் வருகை

சேலம் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செப்.15 ஆம் தேதி சேலம் வருகிறாா். தமிழகம் முழுவதும் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுவினரு... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற கி.மதிவாணனுக்கு பாராட்டு

தமிழ அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற தம்மம்பட்டியை அடுத்த கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணனுக்கு ஊா் பொதுமக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கொண்டயம்ப... மேலும் பார்க்க

880 வீரா்கள் மாநில விளையாட்டுப் போட்டிக்கு தகுதி: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

முதல்வா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிக்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 880 போ் தகுதி பெற்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பை விளை... மேலும் பார்க்க

தொழில்மைய இணை இயக்குநா் வீட்டில் 56 பவுன் நகை, ரூ. 75 ஆயிரம் ரொக்கம் திருட்டு

சேலத்தில் தொழில்மைய இணை இயக்குநா் வீட்டின் பூட்டை உடைத்து 56 பவுன் நகை, ரூ. 75 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். சேலம் ஐந்து வழிச்சாலை அருகே உள்ள தொழில் மையத்தின் இணை இய... மேலும் பார்க்க