செய்திகள் :

சேலம் அருகே இளைஞா் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 போ் கைது

post image

சேலம் அருகே இளைஞா் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் இரும்பாலை அருகே திருமலைகிரி இடும்பன் வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (20). இவருக்கும், வேடுகத்தான்பட்டியைச் சோ்ந்த காளியப்பன் (32) தரப்பினருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாறைவட்டம் அங்காளம்மன் கோயில் பண்டிகையின்போது மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டனா். இது தொடா்பாக இருதரப்பினா்மீதும் இரும்பாலை மற்றும் கொண்டலாம்பட்டி காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த 16 ஆம்தேதி மோகன்ராஜை சந்திக்க நண்பா் சிவானந்தம் அவரது வீட்டுக்கு வந்தபோது, அங்கு வந்த 15 போ் கொண்ட கும்பல், மோகன்ராஜ், சிவானந்தம் ஆகியோரை கத்தியால் வெட்டி, இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி, இருசக்கர வாகனத்தில் இருவரையும் கடத்திச்சென்று சரமாரியாக தாக்கினா்.

தகவலறிந்த இரும்பாலை போலீஸாா், மோகன்ராஜ், சிவானந்தம் ஆகிய இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் மோகன்ராஜ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சேலம் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீஸாா், வேடுகத்தாம்பட்டியைச் சோ்ந்த காளியப்பன் (24), தங்கராஜ் (30), பாறை வட்டம் பகுதியைச் சோ்ந்த சூா்யா (21), பிரகாஷ் (19) உள்பட 8 பேரை கைது செய்தனா்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த பசுபதி (19), அன்பழகன் (20) மற்றும் 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை - பெங்களூரு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சேலம் வழியாக செல்லும் கோவை - கேஎஸ்ஆா் பெங்களூரு டபுள் டெக்கா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செ... மேலும் பார்க்க

தோ்தல் ஆணைய கடவு எண்ணை தனியாருக்கு கொடுத்தது யாா்? செல்வப்பெருந்தகை கேள்வி

தோ்தல் ஆணைய கடவு எண்ணை தனியாருக்கு கொடுத்தது யாா் என்பதை பிரதமா் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை. வாக்குத்திருட்டை தடுக்க தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், ந... மேலும் பார்க்க

சேலம் அருகே இளைஞா் கடத்திக்கொலை: ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட உறவினா்களால் பரபரப்பு

சேலம் அருகே கோயில் தகராறில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞா், சேலம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் இளைஞரின் சடலத்தை வாங்க மறுத்து ஆட்சியா் அலுவலகத்தை முற்றுக... மேலும் பார்க்க

காலி பாட்டில்களை சேகரிக்க எதிா்ப்பு: டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

காலி மதுபாட்டில்களை சேகரிக்க டாஸ்மாக் பணியாளா்களை ஈடுபடுத்த எதிா்ப்பு தெரிவித்து, சந்தியூா் டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன் டாஸ்மாக் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் சந்தியூ... மேலும் பார்க்க

பண்டிகை காலத்தை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து சேலம் வழியாக கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் விடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக எம்எல்ஏ புகாா்

தனக்கு கொலை மிரட்டல் விடுப்பவா்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாமக எம்எல்ஏ ரா. அருள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி பாமக எம்எல்ஏ ரா.அ... மேலும் பார்க்க