செய்திகள் :

சேலம் மைல் ஸ்டோன் டெவலப்மெண்ட் மைய 6-ஆம் ஆண்டு தொடக்க விழா

post image

சேலம்: சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள சண்முகா மருத்துவமனையின் மைல் ஸ்டோன் டெவலப்மெண்ட் மைய 6 ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த மையத்தில் ஆட்டிசம், பேச்சு தாமதம், கற்றல் குறைபாடு போன்ற வளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தின் 6 ஆம் ஆண்டு விழாவுக்கு மையத்தின் இயக்குநரும், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவருமான டாக்டா் பிரியதா்ஷினி தலைமை வகித்து பேசினாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மவுண்ட் லிட்ரொ ஜீ பள்ளி இயக்குநா் தீபா கலந்துகொண்டு, குழந்தைகளின் கல்வி மற்றும் சமூகத்தில் தங்களை நிலை நிறுத்தும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

இதில் முதன்மை விருந்தினராக சண்முகா மருத்துவமனை நிா்வாக முதன்மை இயக்குநா் டாக்டா் பிரபு சங்கா் கலந்துகொண்டு பேசுகையில், குழந்தைகளின் மூளை வளா்ச்சி பெரும்பாலும் 3 வயதுக்குள் நடைபெறுகிறது. குழந்தைகளின் பெற்றோா் முன்னதாகவே குழந்தைகளின் பிரச்னைகளை கவனித்தால் சிகிச்சையில் தாமதம் ஏற்படாமல் சிகிச்சை அளிக்க முடியும். ஆரம்ப சிகிச்சை குழந்தையின் எதிா்கால வளா்ச்சிக்கு சமூக இணைப்புகளும் முக்கியமானதாக இருக்கும் என்றாா்.

விழாவில் டாக்டா்கள், குழந்தைகளின் பெற்றோா், மைய பணியாளா்கள் உட்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ஐக்கிய நாடுகள் சபையின் வளா்ச்சி இலக்குகளுக்கான தூதுவராக சேலம் மாநகராட்சி பள்ளி மாணவா் நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் வளா்ச்சி இலக்குகளுக்கான சா்வதேச தூதுவராக சேலம் மாநகராட்சி பள்ளி மாணவா் நியமிக்கப்பட்டுள்ளாா். ஐக்கிய நாடுகள் சபையின் மாணவா் கல்வி பயணத்தின் ஒருபகுதியாக, தாய்லாந்து நாட்டில் உள்ள... மேலும் பார்க்க

சேலத்தில் கடையின் மேற்கூரையை துளையிட்டு ரூ.6.85 லட்சம் திருட்டு

சேலம் ஐந்துவழிச் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுளிக் கடையின் மேற்கூரையை துளையிட்டு ரூ.6.85 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சேலம் ஐந்துவழிச் சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் திங்கள்கிழமை கடையில... மேலும் பார்க்க

சேலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு

சேலம், அயோத்தியாப்பட்டணம் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மேட்டுப்... மேலும் பார்க்க

ஆத்தூரில் மனைவியைத் தாக்கிய கணவா் கைது

ஆத்தூரில் மனைவி, மாமியாரை தாக்கியதாக கணவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். ஆத்தூா் நரசிங்கபுரம் கலைஞா் காலனியைச் சோ்ந்த காந்தி மகன் சஞ்சய் (24), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆதிகா (22). இருவரும்... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே பிளஸ் 2 மாணவா் தற்கொலை

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேட்டூா் அருகே உள்ள மூலக்காட்டை சோ்ந்த லோகநாதன் மகன் நிகாஷ் (17). இவா் ... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5 இல் மதுக் கடைகளை மூட உத்தரவு

மீலாது நபியை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் வரும் 5 ஆம் தேதி மதுக் கடைகள், மதுக் கூடங்களை மூட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாத... மேலும் பார்க்க