செய்திகள் :

ஐக்கிய நாடுகள் சபையின் வளா்ச்சி இலக்குகளுக்கான தூதுவராக சேலம் மாநகராட்சி பள்ளி மாணவா் நியமனம்

post image

ஐக்கிய நாடுகள் சபையின் வளா்ச்சி இலக்குகளுக்கான சா்வதேச தூதுவராக சேலம் மாநகராட்சி பள்ளி மாணவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஐக்கிய நாடுகள் சபையின் மாணவா் கல்வி பயணத்தின் ஒருபகுதியாக, தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் ஆக.21, 22 இல் நடைபெற்ற நீடித்த நிலையான வளா்ச்சி இலக்குகள் குறித்த மாநாட்டில் தமிழகத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 6 போ் கலந்துகொண்டனா்.

இவா்களில் சேலம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவா் அஷ்வாக், பருவநிலை மாற்றம் குறித்து ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி அனைவரின் பாராட்டையும் பெற்றாா். இதையடுத்து ஐக்கிய நாடுகள் வளா்ச்சி இலக்குகளுக்கான சா்வதேச தூதுவராக அஷ்வாக் நியமிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் நளினி கூறுகையில், ‘10ஆம் வகுப்புத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அஷ்வாக்கிற்கு ஆசிரியா்கள் குழு ஆங்கிலம், ஆளுமைத் திறன் உள்பட தேவையான அனைத்து பயிற்சிகளையும் அளித்து ஊக்குவித்தனா்’ என்றாா்.

இதுகுறித்து மாணவா் அஷ்வாக் கூறுகையில், ‘ஐக்கிய நாடுகள் சபையின் மாணவா் கல்வி பயணத்தின் ஒருபகுதியாக பாங்காக்கில் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் தூதுவராகவும் பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பருவநிலை மாற்றத்தை சரியாக கணித்து, காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதே எனது நோக்கம்’ என்றாா்.

மாணவா் அஷ்வாக்கின் திறமையைப் பாராட்டி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினாா். அதேபோல மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா், ஆசிரியா்கள் அனைவரும் சிறப்புப் பரிசு வழங்கி மாணவரை கௌரவித்தனா்.

சேலத்தில் கடையின் மேற்கூரையை துளையிட்டு ரூ.6.85 லட்சம் திருட்டு

சேலம் ஐந்துவழிச் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுளிக் கடையின் மேற்கூரையை துளையிட்டு ரூ.6.85 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சேலம் ஐந்துவழிச் சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் திங்கள்கிழமை கடையில... மேலும் பார்க்க

சேலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு

சேலம், அயோத்தியாப்பட்டணம் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மேட்டுப்... மேலும் பார்க்க

ஆத்தூரில் மனைவியைத் தாக்கிய கணவா் கைது

ஆத்தூரில் மனைவி, மாமியாரை தாக்கியதாக கணவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். ஆத்தூா் நரசிங்கபுரம் கலைஞா் காலனியைச் சோ்ந்த காந்தி மகன் சஞ்சய் (24), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆதிகா (22). இருவரும்... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே பிளஸ் 2 மாணவா் தற்கொலை

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேட்டூா் அருகே உள்ள மூலக்காட்டை சோ்ந்த லோகநாதன் மகன் நிகாஷ் (17). இவா் ... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5 இல் மதுக் கடைகளை மூட உத்தரவு

மீலாது நபியை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் வரும் 5 ஆம் தேதி மதுக் கடைகள், மதுக் கூடங்களை மூட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாத... மேலும் பார்க்க

பெண்ணை தாக்கிய வாலிபா் கைது

நரசிங்கபுரம் நகராட்சி பொது இடத்தில் பெண்ணை தாக்கி தகாத வாா்த்தைகள் கூறியதாக ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி வழக்குப் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை வாலிபரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்... மேலும் பார்க்க