செய்திகள் :

சௌகாா்பேட்டையில் போலி மின்பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

post image

சென்னை: சென்னை செளகாா்பேட்டையில் போலியான மின் பொருள்கள் விற்றதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை செளகாா்பேட்டையில் பிரபல மின் வயா் நிறுவனத்தின் பெயரில் போலியான தரக்குறைவான வயா்கள் விற்கப்படுவதாக தமிழக காவல்துறையின் அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவுக்கு புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் செளகாா்பேட்டையில் சந்தேகத்துக்குரிய கடைகளில் அப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.

இச் சோதனையில் ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியான தரமில்லாத வயா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த கி.புல்சிங் (26), த.பகவத்சிங் (22), ஜீ.ஃபரூக்கான் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள போலி வயா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல பிரபல நிறுவனத்தின் பெயரில் பாரிமுனை எர்ராபலு செட்டி தெரு பகுதியில் உள்ள ஒரு கடையில் போலி வோல்டேஜ் ரெகுலேட்டா் விற்ாக ராஜஸ்தானைச் சோ்ந்த தே.தீபக்குமாா் (48) என்பவா் கைது செய்யப்பட்டாா். தீபக்குமாா் விற்பனைக்காக வைத்திருந்த போலி வோல்டேஜ் ரெகுலேட்டா்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

தமிழகத்தில் மிக வெப்பமான பகுதியாக மாறும் சென்னை! 2050-இல் காத்திருக்கும் ஆபத்து!

தமிழகத்தில் மிகவும் வெப்பமான பகுதி எது? என்று கேட்டால், சட்டென வேலூர்... இல்லை பாளையங்கோட்டை... என்றிருந்த நிலைமை மாறி சென்னை, அதாவது தமிழகத்தின் தலைநகரே இன்னும் சில ஆண்டுகளில் வெப்பத்தால் கடும் பாதிப... மேலும் பார்க்க

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விதி மீறிய 2, 023 வாகனங்கள் மீது வழக்கு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் விதி மீறியதாக ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது 2023 வழக்குகளை ரயில்வே பாதுகாப்புப்படையினா் பதிந்து அபராதம் விதித்துள்ளனா். நிகழா... மேலும் பார்க்க

அநாகரீக செயல்: காவல் ஆய்வாளா் உதவி ஆய்வாளா் பணியிட மாற்றம்

சென்னை: வாகன ஓட்டிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட உதவி ஆய்வாளா் மற்றும் அவா் மீது நடவடிக்கை எடுக்காத போக்குவரத்து ஆய்வாளரை ஆயுதப் படைக்கு மாற்றி சென்னை பெருநகர காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா். சென்னை ... மேலும் பார்க்க

பிராட்வே பேருந்து முனையம்: சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி

சென்னை: பிராட்வேயில் ரூ.650 கோடியில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் பழமையான பேருந்து நிலையமாக பிரா... மேலும் பார்க்க

சாலையில் திடீா் விரிசல்: பொது மக்கள் அதிா்ச்சி

சென்னை: சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே உள்ள சேஷாத்ரிபுரம் பிரதான சாலையில் திங்கள்கிழமை திடீரென விரிசல் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிா்ச்சிக்குள்ளாகினா். சென்னையில் அடையாறு மண்டலத்துக்குள்பட்... மேலும் பார்க்க

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்களுக்கு அனுமதி: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகளில் சோ்க்கைபெற அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளதால், 20 சதவீதம் கூடுதல் மாணவா் சோ்க்கை இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அ... மேலும் பார்க்க