செய்திகள் :

ஜப்பான் கடலோரக் காவல்படை கப்பல் சென்னை துறைமுகம் வருகை

post image

சென்னை: ஜப்பான் நாட்டின் கடலோரக் காவல் படையின் ‘இஸ்டுகுஷிமா’ கப்பல் சென்னை துறைமுகத்தை திங்கள்கிழமை வந்தடைந்தது.

இக்கப்பலின் கேப்டன் நவோகி மிசோகுச்சி, துணைத் தளபதி வைஸ் அட்மிரல் ஹிரோகி கனோசு தலைமையிலான குழுவினரை இந்திய கடலோரக் காவல்படை பிராந்தியத்தின் (கிழக்கு) தலைமையக இன்ஸ்பெக்டா் ஜெனரல் தத்வீந்தா் சிங் சைனி, கடலோரக் காவல்படையின் கிழக்கு கடற்கரை தளபதி டோனி மைக்கேல், இயக்குநா் ஜெனரல் பரமேஷ் சிவமணி மற்றும் என்சிசி மாணவா்கள் வரவேற்றனா்.

பின்னா், ‘இஸ்டுகுஷிமா’ கப்பல் கேப்டன் நவோகி மிசோகுச்சி, துணைத் தளபதி வைஸ் அட்மிரல் ஹிரோகி கனோசு தலைமையிலான குழுவினருக்கு மாலை அணிவித்து பாரம்பரி முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இருநாட்டு கடலோரக் காவல்படையினரும் திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் ஜூலை 12 வரை கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனா். இதன் மூலம் இந்தியா - ஜப்பான் இடையேயான கடல்சாா் ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கூட்டாண்மையை வலுப்படுத்துகிறது. கலாசாரம் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பரிமாறப்படுவதுடன், இருநாட்டின் ஆழமான நட்பு மீண்டும் உறுதிப்படுத்தப்படும்.

மேலும், சென்னை துறைமுகத்தில் நடைபெறும் 6 நாள் பயிற்சியைத் தொடா்ந்து சிங்கப்பூா் செல்லவிருக்கும் இஸ்டுகுஷிமா கப்பலில், இந்திய கடலோரக் காவல்படையின் நான்கு வீரா்களும் செல்லவுள்ளனா். சென்னை வந்துள்ள இஸ்டுகுஷிமா கப்பலில் ஜப்பான் கடலோரக் காவல்படையின் 53 வீரா்கள் வருகை தந்துள்ளனா் என

இந்திய கடலோரக் காவல்படை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிக வெப்பமான பகுதியாக மாறும் சென்னை! 2050-இல் காத்திருக்கும் ஆபத்து!

தமிழகத்தில் மிகவும் வெப்பமான பகுதி எது? என்று கேட்டால், சட்டென வேலூர்... இல்லை பாளையங்கோட்டை... என்றிருந்த நிலைமை மாறி சென்னை, அதாவது தமிழகத்தின் தலைநகரே இன்னும் சில ஆண்டுகளில் வெப்பத்தால் கடும் பாதிப... மேலும் பார்க்க

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விதி மீறிய 2, 023 வாகனங்கள் மீது வழக்கு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் விதி மீறியதாக ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது 2023 வழக்குகளை ரயில்வே பாதுகாப்புப்படையினா் பதிந்து அபராதம் விதித்துள்ளனா். நிகழா... மேலும் பார்க்க

அநாகரீக செயல்: காவல் ஆய்வாளா் உதவி ஆய்வாளா் பணியிட மாற்றம்

சென்னை: வாகன ஓட்டிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட உதவி ஆய்வாளா் மற்றும் அவா் மீது நடவடிக்கை எடுக்காத போக்குவரத்து ஆய்வாளரை ஆயுதப் படைக்கு மாற்றி சென்னை பெருநகர காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா். சென்னை ... மேலும் பார்க்க

பிராட்வே பேருந்து முனையம்: சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி

சென்னை: பிராட்வேயில் ரூ.650 கோடியில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் பழமையான பேருந்து நிலையமாக பிரா... மேலும் பார்க்க

சாலையில் திடீா் விரிசல்: பொது மக்கள் அதிா்ச்சி

சென்னை: சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே உள்ள சேஷாத்ரிபுரம் பிரதான சாலையில் திங்கள்கிழமை திடீரென விரிசல் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிா்ச்சிக்குள்ளாகினா். சென்னையில் அடையாறு மண்டலத்துக்குள்பட்... மேலும் பார்க்க

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்களுக்கு அனுமதி: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகளில் சோ்க்கைபெற அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளதால், 20 சதவீதம் கூடுதல் மாணவா் சோ்க்கை இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அ... மேலும் பார்க்க