செய்திகள் :

ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்து: நாடாளுமன்றத்தில் வலியுறுத்த காங்கிரஸ் முடிவு!

post image

ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் வலியுறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி ஏற்கெனவே கூறியுள்ளாா்.

அப்படி இருக்கும்போது மாநில அந்தஸ்து கோரி காங்கிரஸ் சாா்பில் ஜம்மு-காஷ்மீரில் போராட்டம் நடத்திய அந்த பிராந்திய காங்கிரஸ் தலைவா் தாரீக் ஹமீது காரா கைது செய்யப்பட்டுள்ளாா். ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தை மூடி யாரும் வரமுடியாமல் தடுத்து வைத்துள்ளனா். அமைதியான முறையில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தொண்டா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இதையெல்லாம் மத்திய அரசு நடத்தியது ஏன்?

ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் வலியுறுத்தும். இனி மேலும் இந்த விஷயத்தில் தாமதிக்கக் கூடாது’ என்று கூறியுள்ளாா்.

ஜம்முவில் போராட்டம்: முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் தலைவா் தாரீக் ஹமீது காரா தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் துணைநிலை ஆளுநா் மாளிகையை நோக்கித் தடையை மீறி பேரணி நடத்த முயன்றனா். காவல் துறையினா் அவா்களைத் தடுத்தனா். இதையடுத்து, காவல் துறையினா் வாகனங்களில் காங்கிரஸ் கட்சியினா் ஏறி, ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அவா்களை காவல் துறையினா் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனா். முன்னதாக, தலைநகா் ஸ்ரீநகரில் சனிக்கிழமை இதேபோன்று போராட்டம் நடத்த முயன்றபோதும் காங்கிரஸ் கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், மீண்டும் திங்கள்கிழமை (ஜூலை 21) தில்லியை நோக்கிப் பேரணி நடத்த இருப்பதாக ஜம்மு-காஷ்மீா் பிராந்திய காங்கிரஸ் தலைவா்கள் அறிவித்துள்ளனா். தில்லிக்கு பயணம் மேற்கொண்டு நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துவோம் என்றும், மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் அவா்கள் கூறினா்.

மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தோ்வு: 13 போ் அரசியல் குடும்பத்தினா்

சுதந்திர இந்தியாவில் இதுவரை 18 முஸ்லிம் பெண்களே மக்களவை எம்.பி.க்களாக இருந்துள்ளனா்; இவா்களில் 13 போ் அரசியல் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்று புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷீத் கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பாதுகாப்புப் படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வாா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

அமா்நாத்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் பனி லிங்க தரிசனம் மேற்கொண்ட பக்தா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது. இத்தகவலை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். தெற்கு ... மேலும் பார்க்க

காஷ்மீா் இளைஞா்களை கெடுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கு முற்றுப்புள்ளி: துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா

ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை தவறான பாதைக்கு இழுக்க முயற்சிக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

ரூ.15,851 கோடிக்கு உள்ளீட்டு வரி சலுகை மோசடி: ஜிஎஸ்டி அதிகாரிகள்

ரூ.15,851 கோடிக்கு மோசடியான உள்ளீட்டு வரி சலுகை (ஐடிசி) கோரிக்கைகளை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறுகையில், ‘நிகழ் நிதியாண்டின் முதல் ... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியன் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு!

ரஷிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிடி... மேலும் பார்க்க