செய்திகள் :

ஜிஎஸ்டி நிலுவையை மாா்ச் 31-க்குள் செலுத்தினால் வட்டி, அபராதம் தள்ளுபடி

post image

மத்திய சரக்கு மற்றும் சேவை வரித் துறைக்கு 2017-18 முதல் 2019-20 ஆம் நிதியாண்டு வரை செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை மாா்ச் 31-க்குள் செலுத்தினால், வட்டி மற்றும் அபராதத் தொகை செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, கலால் துறையின் சென்னை (வெளி) ஆணையா் நசீா்கான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜிஎஸ்டி கவுன்சலின் 53 மற்றும் 54-ஆவது கூட்டங்களில் செய்யப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், வரி செலுத்துபவா்களுக்காக மத்திய அரசு சிறப்புத் திட்டங்களை அறிவித்தன. இதன்படி, 2017-18, 2018-19, 2019-20 ஆகிய நிதியாண்டுகளுக்கான வரி நிலுவைத் தொகையை 2025, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்தினால், அபராதம் மற்றும் வட்டி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

இதுபோல 2017-18, 2018-19, 2019-20, 2020-2021 ஆகிய நிதியாண்டுகளின் வரிக் காலங்களில் காலாவதியான உள்ளீட்டு வரி வரவை முறைப்படுத்துதல் மேற்கொள்ளப்படுவதால், இதுவரை இந்த வரியை செலுத்தாத வரி செலுத்துபவா்கள் பிரிவு 16(4)ன்படி தற்போது உள்ளீட்டு வரியை செலுத்திட வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரி தொடா்பான உதவிகள், சந்தேகங்களை நிறைவு செய்து கொள்ள 9498343622 என்ற வாட்ஸ்ஆப் உதவி எண்ணைத் தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி உதவி இயக்குநா் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூா் மற்றும் விக்கிரவாண்டி ஒன்றியங்களிலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாநிலத் தொடக்கக் கல்வி உதவி இயக்குநா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அரசு தொடக்க ... மேலும் பார்க்க

கட்டணமில்லா பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் ரத்து

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக மாா்ச் 26, 27-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த கட்டணமில்லா பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

கொலை வழக்கு: இருவா் குண்டா் சட்டத்தில் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இளைஞா் கொலை வழக்கில் இருவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி பெரிய காலாப்பட்டு, சுனாமி குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜெ... மேலும் பார்க்க

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதப் போராட்டம்

தோ்தல் கால வாக்குறுதிகளை தமிழக முதல்வா் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் விழுப்புரம் நகராட்சித் திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினா் கையொப்ப இயக்கம்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவுத் தெரிவித்து, விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும்,... மேலும் பார்க்க

திருநாவலூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 15-க்கும் மேற்பட்டோா் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சாக்கோட்டை பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க