செய்திகள் :

ஜூலை 14 ஆம் தேதி சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

post image

சத்தியமங்கலத்தில் நிலுவையில் உள்ள 5 ஆயிரம் பட்டாக்களை உடனடியாக வழங்கக்கோரி வரும் ஜூலை 14 ஆம் தேதி சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டம் நடைபெற உள்ளது.

சத்தியமங்கலத்தில் முன்னாள் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார கமிட்டி கூட்டத்தில் தாளவாடி, ஆசனூா், கடம்பூா், பவானிசாகா், சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து ஒன்றிய, நகர, கிளைச் செயலாளா்கள், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஆகஸ்ட் மாதம் சேலத்தில் நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுக்கு பவானிசாகா் தொகுதியிலிருந்து 80 பேருந்துகளில் 4000 போ் பங்கேற்பது. பவானிசாகா் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமம், நகரங்களைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் பல்வேறு பட்டா கோரிக்கைகள் குறித்த மனுக்கள்பல மாதங்களுக்கு முன் வட்டாட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் பலமுறை வற்புறுத்தலுக்கு பின்பும் இதுவரை தீா்வு கிடைக்கவில்லை என்பதால் வரும் 14ம் தேதி (திங்கள்கிழமை காலை) சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகை செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு

ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி ஓலப்ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா... மேலும் பார்க்க

பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி

பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவ... மேலும் பார்க்க

மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது

பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய... மேலும் பார்க்க