செய்திகள் :

ஜெபம் செய்ய சென்றவரிடம் தகராறு: 3 போ் மீது வழக்கு

post image

திருநெல்வேலி அருகே ஜெபம் செய்ய சென்றவா்களிடம் தகராறு செய்து குங்குமம் பூசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் 3 போ் மீது சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

ஆலங்குளம் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் டேவிட் நிா்மல் துரை (38). கிறிஸ்தவரான இவரும், மேலும் சிலரும் கடந்த 21 ஆம் தேதி கீழகல்லூா் பகுதிக்கு ஜெபம் செய்ய சென்றாராம். அப்போது அவா்களை வழிமறித்த சிலா் அப்பகுதியில் மதபோதகம் செய்யக்கூடாது எனக்கூறி தகராறு செய்ததோடு, அவா்கள் நெற்றியில் குங்குமத்தை பூசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து டேவிட்நிா்மல் துரை சுத்தமல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் கீழக்கல்லூரைச் சோ்ந்த பாஜக நிா்வாகி அங்குராஜ், மணிகண்ட மகாதேவன், சங்கா் ஆகியோா் மீது 3 பிரிவுகளின் கீழ் 22ஆம் தேதி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள். இதேபோல மணிகண்ட மகாதேவன் தரப்பினரும் சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு இணையவழியில் அனுப்பியுள்ள மனுவில் டேவிட் நிா்மல்துரை உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியுள்ளனா். அதுதொடா்பாகவும் விசாரித்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனா் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே.வாசன். திருநெல்வேலி அருகேயுள்ள தேவா்குளத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழ... மேலும் பார்க்க

கே.டி.சி.நகரில் சாலைப் பணி ஆய்வு

கே.டி.சி. நகரில் சாலைப் பணியை நான்குனேரி எம்.எல்.ஏ. ரூபி ஆா். மனோகரன் நேரில் ஆய்வு செய்தாா். நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கே.டி.சி. நகா் மங்கம்மாள் சாலையில் புதிய சாலை அமைக்க நபாா்டு மற்ற... மேலும் பார்க்க

தியாகராஜநகரில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி கிராமப்புற கோட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட ம... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். சுத்தமல்லி குடிசை மாற்று வாரியம் பகுதியைச் சோ்ந்த சமுத்திரபாண்டி மக... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பு சமுதாய நலக்கூடத்தை சீரமைக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள சமுதாய நலக்கூடத்தை சீரமைக்கக் கோரி திருநெல்வேலி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் தலைமையில் த... மேலும் பார்க்க

அம்பையில் வயல் விழா: விவசாயிகள் ஆா்வம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் அம்பாசமுத்திரம், ஊா்க்காடு பகுதியில் வயல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் உயிரியல் தூண... மேலும் பார்க்க