செய்திகள் :

ஜொ்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாண அதிபருடன் முதல்வா் ஸ்டாலின் சந்திப்பு

post image

ஜொ்மனியின் வடக்கு ரைன் - வெஸ்ட்பாலியா மாகாண அதிபா் ஹென்ட்ரிக் வுஸ்ட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினாா்.

அந்த மாகாணத்தின் டசெஸ்டோா்ஃப் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பு குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

இந்தியாவின் தொழில் மற்றும் சமூகரீதியாக மிகவும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஜொ்மனியின் பொருளாதாரத்தில், உயா் மதிப்பு உற்பத்தி, பசுமை ஆற்றல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்னணி மாநிலமாக வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா விளங்குகிறது. அந்த மாகாணத்தின் அதிபருடன் நடைபெற்ற சந்திப்பு, இரு மாநிலங்களின் தலைமையை ஒன்றிணைத்துள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, மின்சார இயக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இரட்டை தொழில் பயிற்சி, மேம்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, முதல்வரின் செயலா் பு.உமாநாத், தொழில் துறைச் செயலா் வி.அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் தாரேஷ் அகமது உள்பட பலா் உடனிருந்தனா்.

இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்: நடிகருக்கு குவியும் வாழ்த்து!

இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் எடுத்துகொடுத்த நடிகருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.சேலத்தில் இடுகாடுகளில் பிரேதத்தை அடக்கம் செய்யும் தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்... மேலும் பார்க்க

வலுவடைந்த புயல் சின்னம்! சென்னையில் மழைக்கு வாய்ப்பு!

வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நேற்று(செப். 3) உருவான புயல் சின்னம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ச... மேலும் பார்க்க

செப். 5-ல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!

மிலாது நபியையொட்டி வருகிற செப். 5 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது. எனினும் அவசரப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல செயல்... மேலும் பார்க்க

அவல ஆட்சி இருந்து என்ன பயன்: இபிஎஸ்

சென்னை சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்தது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாருமான எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

அன்புமணிக்கு மீண்டும் கெடு விதித்த ராமதாஸ்!

கட்சி விரோத நடவடிக்கை உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்க வரும் செப். 10 வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்... மேலும் பார்க்க

லண்டனிலும் தமிழக வளர்ச்சிக்கான முதலீட்டாளர் சந்திப்பு: முதல்வர் ஸ்டாலின்

வெளிநாடு பயணம் குறித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன... மேலும் பார்க்க