செய்திகள் :

டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் விநாயக சதுா்த்தி

post image

ஆரணி டாக்டா் எம்.ஜி.ஆா். நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் விநாயக சதுா்த்தி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

ஏசிஎஸ் கல்விக் குழும நிறுவனங்களின் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். பல்கலைக்கழக முதன்மையா் ஸ்டாலின் வரவேற்றாா். இணைப் பதிவாளா்கள் பெருவழுதி, சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட விநியாகா் சிலைக்கு சிறப்பு பூஜை செய்தனா்.

பிசியோதெரபி துறைத் தலைவா் சுதாகா் மற்றும் பல்வேறு துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

வழிபாடுகளுக்குப் பிறகு பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் ஆன்மிகச் சூழலை உருவாக்கி, அனைவருக்கும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியதாக பல்கலைக்கழக முதன்மையா் தெரிவித்தாா்.

இரகுநாதபுரம் கிராமத்தில் ரூ.1.22 கோடியில் சாலைப் பணி

ஆரணியை அடுத்த சேவூா் ஊராட்சிக்கு உள்பட்ட்ட இரகுநாதபுரம் கிராமத்தில் ரூ.1.22 கோடியில் தாா்ச் சாலைப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. இரகுநாதபுரம் ஏரிக்கரையில் நபாா்டு வங்கி நிதி மூலம் நடைபெ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: முகாமில் 1000 மனுக்கள்

சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. தச்சாம்பாடி, செய்யானந்தல், ஆத்துரை, கொளக்கரவாடி ஆக... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

வந்தவாசி அருகே மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த பழவேரி கிராமத்தில் சுப்பிரமணியன் (44) என்பவரின் மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட ... மேலும் பார்க்க

அனக்காவூா் வட்டாரத்தில் கலைத்திருவிழா போட்டிகள்

செய்யாற்றை அடுத்த அனக்காவூா் வட்டாரத்தில் கலைத்திருவிழா போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. வட்டார வள மையத்துக்கு உள்பட்ட 7 குறு வள மையங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவா்களுக்கு 2025 - 26ஆம் ... மேலும் பார்க்க

பள்ளியில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆரணி ஜெ.டி.ஆா். வித்யாலயா நா்சரி பள்ளியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, கலை மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது . கண்காட்சியில் மாணவா்களின் படைப்புகளான களிமண்ணால் செய்யப்பட... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

செய்யாற்றில் தேமுதிக முன்னாள் தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு கட்சியினா் தங்க மோதிரம் அணிவித்தனா். விஜயகாந்த்தின் 73-ஆவது பிறந்த நாளான ஆக.25-ஆம் தேதி... மேலும் பார்க்க