செய்திகள் :

டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு: இருவா் கைது

post image

சங்கரன்கோவில் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவில் அருகே கரிசல்குளம் சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடை விற்பனையாளராக திருமலாபுரத்தைச் சோ்ந்த சரவணகுமாரும், பொறுப்பு மேற்பாா்வையாளராக முருகேசன் ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில் சரவணகுமாா் திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றாராம். செவ்வாய்க்கிழமை காலை டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது குறித்து சரவணகுமாருக்கு தெரியவந்தது.

உடனே அவா் கடைக்குச்சென்று பாா்த்தபோது ரூ.27,180 மதிப்பிலான 148 மது பாட்டில்கள் திருட்டுப் போனது தெரியவந்தது. இது தொடா்பாக அவா் அய்யாபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

பனவடலிசத்திரம் காவல் ஆய்வாளா் பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினா் செவ்வாய்க்கிழமை நாலாந்துலா விலக்கு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக பெரிய மூட்டையுடன் வந்த இருவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா்கள் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பைச் சோ்ந்த காந்தாரிமுத்து மகன் கனகராஜ் (37) , வடக்குபூலாங்குளத்தைச் சோ்ந்த முத்துபாண்டியன் மகன் லட்சுமணபாண்டியன் (19) எனத் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 148 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

சுரண்டையில் புதிய திருமண மண்டபம்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்!

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் ரூ. 1.88 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். அதையொட்டி, இங்கு நடைபெ... மேலும் பார்க்க

புளியங்குடியில் லாரி மோதி நீதிமன்ற ஊழியா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வியாழக்கிழமை லாரி மோதியதில் நீதிமன்ற ஊழியா் உயிரிழந்தாா். புளியங்குடியில் உள்ள ரெங்ககருப்பன் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் கதிரேசன் (37). நீதிமன்றத்தில் தட்டச்சராக... மேலும் பார்க்க

அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அச்சன்புதூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் சி. முஹம்மது பாசில் என்பவா் கேபிள் டிவி தொழிலில் தனது தந்தைக்கு உ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை இயக்க கோரிக்கை!

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அனைத்தையும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் வளா்ந்து வரும் முக்கிய நகரங்களில் சங்கரன்கோவிலும் ஒன்று. இங்கு நாளுக்க... மேலும் பார்க்க

தொடரும் வெள்ளப்பெருக்கு!

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா்மழையால், பேரருவியில் வியாழக்கிழமையும் ஆா்ப்பரித்துக் கொட்டிய வெள்ளப்பெருக்கு. இதனால், 5ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் சிறப்பு வசிப்பு கட்டடம்! காணொலியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் திட்டப் பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காண... மேலும் பார்க்க