செய்திகள் :

டிசிஎஸ் சிஇஓ கீர்த்திவாசனின் ஊதியம் எவ்வளவு தெரியுமா?

post image

டிசிஎஸ் நிறுவனம் பணிநீக்கத்தை அறிவித்துள்ள நிலையில் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளின் ஊதியம் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், உலகம் முழுவதும் உள்ள தங்கள் நிறுவனங்களில் இருந்து 2%, அதாவது சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது ஐடி ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்யறிவு தொழில்நுட்பத்தினால் நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில் வரும் காலங்களில் இதனால் பல்வேறு துறைகளின் வேலைவாய்ப்பு பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

திறன் பொருத்தமின்மை காரணமாக பணிநீக்கம் செய்யப்படுவதாகவும் அவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நிர்வாக அதிகாரி கீர்த்திவாசன் கூறியுள்ளார்.

இந்நிலையில் டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி கீர்த்திவாசனின் ஊதியம் குறித்த தகவல்கள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

தகவல்களின்படி, கீர்த்திவாசன் ஆண்டுக்கு ரூ. 26.52 கோடியை ஊதியமாகப் பெறுகிறார். அடிப்படை ஊதியம் ரூ. 1.39 கோடி, சலுகைகள் ரூ. 2.12 கோடி மற்றும் 23 கோடி கமிஷன் ஆகியவை இதில் அடங்கும். கடந்த நிதியாண்டைவிட இந்த ஆண்டு 4% ஊதியம் அதிகம்.

இதற்கு முன்னதாக டிசிஎஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த என்.ஜி. சுப்பிரமணியம், கடந்த 2024 மே மாதம் பதவியில் இருந்து விலகியபோது ஆண்டுக்கு ரூ. 11.55 கோடி ஊதியமாகப் பெற்றுள்ளார்.

டிசிஎஸ் தலைவர் என். சந்திரசேகரன் ரூ.2.1 லட்சத்தை மட்டும் ஊதியமாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

With TCS announcing layoffs, there has been widespread talk about the salaries of top executives, including the company's CEO.

இதையும் படிக்க | டிசிஎஸ் பணிநீக்கத்தால் வீடு, மனை விற்பனை பாதிக்குமா? வல்லுநர்கள் சொல்வது என்ன?

அனில் அம்பானி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

தொழிலதிபர் அனில் அம்பானி நேரில் ஆஜராவதற்கு அழைப்பு விடுத்து அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.யெஸ் வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூ.3,000 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும்... மேலும் பார்க்க

புதிய விதிமுறை அமல்! ஜிபே, போன்பே பயனர்கள் கவனத்துக்கு...

ஜிபே, போன் பே போன்ற யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.கடந்த ஏப்தல் - மே மாதங்களில் டிஜிட்டல் பணப்... மேலும் பார்க்க

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரியாவு உருளை விலை ரூ.1,789 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வா்த்தக சமையல் எரியாவு உருளை ஒன்றின் விலை ர... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவையில் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு!

மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது ஆன்லைன் ரம்மி விளையாடிய சர்ச்சையில் சிக்கிய அமைச்சா் மாணிக்ராவ் கோகடே, வேளாண் துறையில் இருந்து விளையாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.மகாராஷ்டிர சட்டப்பேரவை... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமா் ஆலோசனை

ஐக்கிய அரபு அமீரக அதிபா் முகமது பின் சையது அல் நஹ்யானுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வழியில் வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளி... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் மீண்டும் முடக்கம் - பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் மீண்டும் முடங்கின.நாடாளுமன்ற மழைக்... மேலும் பார்க்க