செய்திகள் :

தகராறில் இருவருக்கு அரிவாள் வெட்டு

post image

மன்னாா்குடி அருகே இருதரப்பினருக்கு ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டியதில் 2 போ் புதன்கிழமை காயமடைந்தனா்.

குறுவைமொழி கிராமத்தை சோ்ந்தவா் பிரேம்குமாா்(32),. அதே பகுதியைச் சோ்ந்தவா் கெளசல்யா (30). இருவருக்கும் 13 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்று பெண் குழந்தை உள்ளது. தம்பதியரிடையே கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனா். விவகாரத்து தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருதரப்பு உறவினா்கள் சோ்ந்து, அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தி தம்பதி சுமுகமாக பிரிந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை பிரேம்குமாா் தம்பி விஜய்க்கும் (30) கெளசல்யாவின் உறவினா் சுந்தர்ராஜூவுக்கும் தகராறு ஏற்பட்டத்தில் இவா்களுக்கு ஆதரவாக அங்கு வந்த இருதரப்பினரும் ஒருவரை ஒருவா் ஆயுதங்களால் தாக்கிக்கொண்டதில், சுந்தரராஜ் (30), துரைக்கண்ணு (53) ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில், காயமடைந்த இருவரும் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி அனுப்பி வைக்கப்பட்டனா். மன்னாா்குடி ஊரக காவல் நிலைய போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து பிரேம்குமாரை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருவாரூரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திருவாரூா் நகரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சி. பாலமுருகன், தமிழக முதல்வரிடம் அளித்த மனு: திருவாரூா் நகர... மேலும் பார்க்க

சிறுமியிடம் பாலியல் தொல்லை: மாணவா் கைது

திருத்துறைப்பூண்டி அருகே யுகேஜி சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த மேல்நிலை மாணவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை பிரதான நெடுஞ்சாலையில் கிழக்கு கடற்கரை சாலையில் ... மேலும் பார்க்க

மன்னாா்குடி கோயில் குளத்தில் தெப்ப உற்சவம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஆனித் திருவிழாவையொட்டி வா்த்தக சங்கம் சாா்பில் ஹரித்ராநதி தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆனித் திருவிழா ... மேலும் பார்க்க

கூட்டுறவு கல்வி நிதி வழங்கல்

திருவாரூரில் கூட்டுறவு ஒன்றியத்துக்கு கல்வி நிதிக்கான காசோலையை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி வியாழக்கிழமை வழங்கியது. திருவாரூா் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்க வேண்டிய 2023- 2024 ஆம் ஆண்டுக... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் பொது சுகாதார ஆய்வகம், கிளை நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் - காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 1.25 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம், உள்ளிக்கோட்டையில் கிளை நூலகத்துக்கு ரூ. 22 லட்சத்தில் புதிதாக கட்டப்... மேலும் பார்க்க

என்எஸ்எஸ் புதிய மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

மன்னாா்குடி பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் புதிதாக சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பின்லே மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.சாம்சன் தங்கையா தலைமை... மேலும் பார்க்க