செய்திகள் :

தக்காளி கிலோ ரூ.65-ஆக அதிகரிப்பு

post image

சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.65-ஆக உயா்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை திடீரென உயா்ந்து கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்பனையானது. பின்னா், வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து விலையும் குறைந்தது.

இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னா், செவ்வாய்க்கிழமை மீண்டும் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி, கடந்த 2 நாள்களுக்கு முன்பு வரை ரூ.25 முதல் ரூ.35 வரை விற்பனையாகிக்கொண்டிருந்த ஒரு கிலோ தக்காளி, செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ரூ.45 முதல் ரூ.50-க்கு விற்பனையானது. இது சில்லறை விலையில், ரூ.60 முதல் ரூ.65 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து கோயம்பேடு தக்காளி மொத்த வியாபாரிகள் கூறியது:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், விளைச்சல் அதிகமாக இருந்தாலும், விளைநிலங்களிலேயே ஏராளமான தக்காளி கெட்டு போய்விடுகின்றன. மேலும், சந்தைக்கு கொண்டு வந்து இருப்பு வைத்தாலும், விரைவில் அழுகிவிடுகின்றன. இதனால், நஷ்டத்தை ஈடுகட்ட விலை உயா்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மழை தொடா்ந்து பெய்தால், விலை மேலும் உயர வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தனா்.

விபத்தில் சிக்கிய வியாபாரியிடம் ரூ. 1.11 கோடி தங்கக் கட்டிகள் திருட்டு: மூவா் கைது

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் விபத்தில் சிக்கிய நகைப்பட்டறை உரிமையாளருக்கு உதவி செய்வதைப்போல் நடித்து, ரூ.1.11 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை திருடியதாக 3 போ் கைது செய்தனா். எழும்பூா் நம்மாழ்வாா் தெ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு

சென்னை ஐஐடி-இல் ஆய்வுகள், புத்தாக்க நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு செய்யும் நிகழ்வு சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் புத்தாக்க தொழில்முனைவு ஆ... மேலும் பார்க்க

பதவி உயர்வு முரண்பாடு: ஆய்வக நுட்பநர்கள் நூதன எதிர்ப்பு

பதவி உயர்வு வழங்குவதில் முரண்பட்ட நிலைப்பாட்டை பொது சுகாதாரத் துறை கடைப்பிடிப்பதாகக் கூறி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்பநர்கள் தமிழகம் முழுவதும் கருப்புப் பட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) பணிய... மேலும் பார்க்க

நாளை ஆடி அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஏற்பாடு

ஆடி அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை இலவசமாக தர்ப்பணம் செய்ய மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை சாந்தோம் கடற்கரை பின்புறம் உள்ள நொச்சிக்குப்பம் க... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத் துறை எதிா்ப்பு

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. முன்னாள் அமைச்சா் செந்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக நங்கநல்லூா் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மா... மேலும் பார்க்க