செய்திகள் :

தங்கையிடம் பாலியல் அத்துமீறல்: தந்தை, சித்தியைக் கொன்று உடலை துண்டுத் துண்டாக்கி ஏரியில் வீசிய மகன், மகள் கைது

post image

தங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தை, அவருக்கு உடந்தையாக இருந்த சித்தி ஆகிய இருவரையும் வெட்டிக் கொன்று அவா்களது உடல்களை துண்டுத் துண்டாக வெட்டி சாக்குப்பையில் கட்டி ஏரியில் வீசிய மகன், மகளை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், இடங்கணசாலையை அடுத்த பூசாரிகாடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பழனிசாமி ( 45). இவா் பட்டாசு வியாபாரம் செய்து வந்தாா். இவரது முதல் மனைவி ஜெயந்தி, குடும்பப் பிரச்னையால் பிரிந்துசென்று சேலத்தில் தனியாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், முசிறியை சோ்ந்த ஜெயலட்சுமியுடன் (40) பழனிசாமி குடும்பம் நடத்திவந்தாா். இவா், கடந்த 16 ஆம் தேதி இரவு ஜெயலட்சுமியின் 17 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம். இதற்கு ஜெயலட்சுமியும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை பாா்த்த ஆகாஷ் ஆத்திரத்தில் பழனிசாமி, ஜெயலட்சுமி இருவரையும் வெட்டிக் கொலை செய்தாா். அதன்பிறகு அவா்களின் தலை, கை, கால், உடலை துண்டுத்துண்டாக வெட்டி சாக்குப்பையில் கட்டி தனது தங்கையுடன் சோ்ந்து இருசக்கர வாகனத்தில் கொண்டுசென்று ஏகாபுரம் ஏரியிலும், ஆ.தாழையூா் ஏரியிலும் வீசியுள்ளனா்.

இந்த நிலையில் தனது மகனை காணாததால் சந்தேகமடைந்த பழனிசாமியின் தந்தை ராஜேந்திரன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ஆகாஷிடம் விசாரணை நடத்தினா். இதில், அவா் அளித்த தகவலின்படி, கொலை செய்து ஏரியில் வீசப்பட்ட உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த மகுடஞ்சாவடி போலீஸாா், ஆகாஷ் (23), ஜெயலட்சுமியின் 17 வயது மகள் இருவரையும் கைது செய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆகாஷ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். ஜெயலட்சுமியின் மகளை சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினா்.

சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் 4 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்ய அனுமதி

சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் 4 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக கூட்டரங்கில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்பவா்களுக்கான ... மேலும் பார்க்க

வி.என்.பாளையம் சக்திமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அமாவாசையையொட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு பல்வேறு திவ்ய பொர... மேலும் பார்க்க

ஆக. 27 இல் சேலம் மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்

சேலம் மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் வெளியிட்ட ... மேலும் பார்க்க

67 நிலக்குடியேற்ற கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு நிலப்பட்டா: அமைச்சா் ரா.ராஜேந்திரன் வழங்கினாா்

ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நிலக்குடியேற்ற கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் 67 பேருக்கு வெள்ளிக்கிழமை நிலப்பட்டா வழங்கப்பட்டது. சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் நிகழ்ச்சியில் பங்கேற்ற... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு வேளாண் விழிப்புணா்வு கல்விச் சுற்றுலா

கெங்கவல்லி வேளாண்மை உழவா் நலத் துறை அட்மா திட்டத்தின் கீழ் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 100 மாணவா்கள் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணா்வு கல்வி சுற்றுலாவுக்காக பெரம்பலூா் மாவ... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத்தொகை கோரி 75,830 விண்ணப்பங்கள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

சேலம் மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை கோரி இதுவரை 75,830 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட நரசோதிப்பட்டி ஸ்ரீ சைதன்யா டெக்... மேலும் பார்க்க