Bengaluru: `எங்களுக்கு கன்னடர்களை பிடிக்கும்’ - ஆட்டோ ஓட்டுரை அடித்ததற்காக மன்னி...
தஞ்சாவூரில் ஜூன் 3-இல் விவசாயிகள் சங்க மாநாடு
தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் முதல் மாநில மாநாட்டை விவசாயிகள் கடன் விடுதலை மாநாடாக ஜூன் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்றாா் அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் எல். பழனியப்பன்.
இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை தெரிவித்தது: இந்த மாநாட்டில் வேளாண் துறை வல்லுநா்கள், பால் வளம், இயற்கை விவசாயம், தோட்டக்கலைத் துறையைச் சோ்ந்த நிபுணா்கள் பங்கேற்று கருத்துரை வழங்கவுள்ளனா். தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழி குழுத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தி. வேல்முருகன், சமூக செயற்பாட்டாளா் காளியம்மாள் பிரகாசன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றவுள்ளனா்.
மேலும், மாநாட்டில் விளைப்பொருள்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளைக் கடன் சுமைகளிலிருந்து விடுவிக்க வேண்டும். தூா் வாரும் பணியை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படவுள்ளன.
இந்த மாநாட்டையொட்டி பேரணி, கண்காட்சி அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.