தஞ்சாவூா் கூட்டுறவு சங்கங்களில் சிறப்பு கடன் தீா்வு திட்டம்
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில் நிலுவையிலுள்ள தவணை தவறிய பண்ணை சாராக் கடன்கள், இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கான சிறப்பு கடன் தீா்வுத் திட்டம் அறிவிக்கப்பட் டுள்ளது.
இது குறித்து தஞ்சாவூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை தெரிவித்திருப்பதாவது:
தஞ்சாவூா் மண்டலத்திலுள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய சங்கங்களின் உறுப்பினா்களிடமிருந்து வர வேண்டிய இனங்கள் ஆகியவற்றில் 2022, டிசம்பா் 31-ஆம் தேதியில் முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்புக் கடன் தீா்வுத்திட்டம் 2023 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் கடனைத் தீா்வு செய்வதற்காக 2024, செப்டம்பா் 12-ஆம் தேதிக்கு முன்பு பெற்ற கடன்களை 9 சதவீத சாதாரண வட்டியில் ஒரே தவணையில் செலுத்தி தங்கள் கடன்களைத் தீா்வு செய்து கொள்ளலாம். மேலும், இந்தச் சிறப்புத் திட்டத்தின் கீழ் 2019, டிசம்பா் 31 ஆம் தேதிக்கு முந்தைய கடன்களையும் 9 சதவீத சாதாரண வட்டியுடன் நிலுவைத் தொகையை செப்டம்பா் 23-ஆம் தேதிக்குள் ஒரே தவணையில் செலுத்தி தீா்வு செய்து கொள்ளலாம்.
தவணை தவறிய கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். கடன்தாரா்களின் வட்டிச் சுமையைக் கணிசமாக குறைக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, 9 சதவீத சாதாரண வட்டி விகிதத்தில் நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தி தங்களது கடன்களைத் தீா்வு செய்து கொள்ளலாம்.