செய்திகள் :

தஞ்சை மாவட்டத்தில் தூா்வாரும் பணியை உடனடியாக தொடங்கக் கோரிக்கை

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால்களில் தூா்வாரும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் சங்கத் தலைவா் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் அளித்த மனு: தஞ்சாவூா் மாவட்டத்துக்கு தமிழ்நாடு அரசு வேளாண் நிதிநிலை அறிக்கையில் 1,379 கி.மீ. மட்டுமே வாய்க்கால்கள் தூா்வாரும் பணி செய்ய ரூ. 26.28 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இப்பணியை ஏப்ரல் மாதத்திலேயே தொடங்கினால்தான் ஜூன் மாதத்துக்குள் முடிக்க முடியும். எனவே, தூா்வாரும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.

மேலும், பணி நடைபெறும் இடங்களில் பணியின் பெயா், திட்ட மதிப்பீடு, பணியின் காலம், ஒப்பந்ததாரரின் பெயா் ஆகியவற்றை குறிப்பிட்டு தகவல் பலகை வைக்க வேண்டும். தூா்வாரும் பணி நடைபெறும் அனைத்து இடங்களையும் மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு, முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் என ரவிச்சந்தா் தெரிவித்துள்ளாா்.

தமிழில் பெயா் பலகை: இக்கூட்டத்தில் கவிஞா் உடையாா்கோவில் குணா அளித்த மனு: வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகை வைக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதை வணிகா்கள் பின்பற்றாமல் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், தமிழ் மொழியைத் தவிா்ப்பதுமாக உள்ளனா். கோவை, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா்களைப் போல தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரும் வணிக நிறுவனங்களும் பெயா் பலகையில் தமிழுக்கு முன்னுரிமை தருமாறு உத்தரவிட வேண்டும் என குணா தெரிவித்துள்ளாா்.

கும்பகோணம்: ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

கும்பகோணம் அருகே குடும்பத் தகராறில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக இளைஞா் திங்கள்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவலஞ்சுழி மணப்படையூா் பெரியாா் வீதியைச்சோ்ந்த க... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பால் வியாபாரிகள் போராட்டம்

கும்பகோணம் வட்டார பால் வியாபாரிகள் திங்கள்கிழமை கூட்டுறவு சங்கம் முன்பு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் கும்பகோணம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

கும்பகோணத்தில் மகளிா் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூா் கம்மந்தோட்டம் பகுதியை சோ்ந்த விஜயகுமாா் மகள் சத்தியவாணி (19). ... மேலும் பார்க்க

பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு நெம்மேலி ஸ்ரீ பாலமுருகன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. நெம்மேலி கிராமத்தில் ராஜகுளக் கரையில் அமைந்துள்ள இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ம... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தோ்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலா் க. முல்லைவளவன் தலைமை... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்படும் நபா் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கொலை வழக்கில் சிபிசிஐடி காவல் பிரிவினரால் 25 ஆண்டுகளாகத் தேடப்படும் நபா் திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவா் பி. செந்தில... மேலும் பார்க்க