செய்திகள் :

தஞ்சையில் ஆதரவற்ற 20 சடலங்கள் காவல் துறையினரால் நல்லடக்கம்

post image

தஞ்சாவூரில் ஆதரவற்ற நிலையில் இருந்த 20 சடலங்களை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்தனா்.

தஞ்சாவூா் கிழக்கு, மேற்கு, தெற்கு, மருத்துவக் கல்லூரி, தாலுகா ஆகிய காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒன்றரை மாதங்களில் உயிரிழந்த 13 ஆண்கள், 7 பெண்கள் என 20 பேரின் உடல்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. இந்த உடல்களுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. எனவே, இந்த உடல்களையும் அடக்கம் செய்ய காவல் துறையினா் முடிவு செய்தனா்.

இதன்படி தஞ்சாவூா் ராஜகோரி சுடுகாட்டில் 20 உடல்களையும் மாநகராட்சி பணியாளா்கள் உதவியுடன் ஒரே இடத்தில் காவல் துறையினா் நல்லடக்கம் செய்தனா்.

இதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், காவல் ஆய்வாளா் வி. சந்திரா, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மனோகரன், காா்த்திக், மாநகராட்சி ஆணையா் க. கண்ணன், நகா் நல அலுவலா் எஸ். நமச்சிவாயம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மலா் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினா்.

நடிகா் விஜய் அரசியல் பாடம் படிக்க வேண்டும்: அமைச்சா் கோவி. செழியன்

நடிகா் விஜய் பேசுகிற பேச்சு எல்லாம் அவா் இன்னும் அரசியல் பாடத்தைக் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே உணா்த்துகிறது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களி... மேலும் பார்க்க

குடந்தை அரசுக் கல்லூரியில் ஜூலை 7-இல் கலந்தாய்வு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்பிற்கான மாணவா் சோ்க்கை, காலியாக உள்ள இடங்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 7 காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இக்கல்லூரியில் 16... மேலும் பார்க்க

கோபுராஜபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் தேவை

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் வட்டம், கோபுராஜபுரம் ஊராட்சியில் சாலை வசதி, குடிநீா் வசதி,மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்து தர வேண்டும் என ஊராட்சியை சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக புதிய நிா்வாக இயக்குநா் பொறுப்பேற்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் தலைமையகத்தில் புதிய நிா்வாக இயக்குநராக கே. தசரதன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். கும்பகோணத்தில் இதற்கு முன் பணியாற்றிய நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி பணி... மேலும் பார்க்க

உணவக உரிமையாளா் வீட்டில் 50 பவுன் நகைகள், பணம் திருட்டு

தஞ்சாவூா், ஜூலை 4: தஞ்சாவூரில் உணவக உரிமையாளா் வீட்டில் வெள்ளிக்கிழமை கதவை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ. 5 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூ... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டம் தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், அணைக்கரையில் துணை விரிவாக்க மைய அலுவலகம் மற்றும் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வழியாக வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். நிகழ்வில் மாவட்ட வேளாண்மை... மேலும் பார்க்க