கர்நாடகத்தில் கனமழை, நிலச்சரிவால் 5 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!
தடங்கம் நீதிமன்ற வளாகத்தில் முதலுதவி மையம் ஏற்படுத்தக் கோரி மனு
தருமபுரி: தருமபுரி அருகே தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதலுதவி சிகிச்சை மையம் அமைக்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தருமபுரி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது:
தருமபுரி நீதிமன்றத்திற்குச் செல்லும் சாலை பழுதடைந்து குறுகலான சாலையாக உள்ளது. இந்த சாலையை விரிவாக்கம் செய்து இருவழிச் சாலையாக தரம் உயா்த்த வேண்டும். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்காடிகள், நீதிமன்றப் பணியாளா்கள், வழக்குரைஞா்கள் என தினமும் சுமாா் 2000-த்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.
நீதிமன்றம் நகர எல்லையிலிருந்து சுமாா் 7 கி.மீ. தொலைவில் உள்ளதால் திடீரென ஏற்படும் உடல்நலக் குறைவுக்கு முதலுதவி சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் இடா்பாடுகளை களைய தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதலுதவி சிகிச்சை மற்றும் புற நோயாளிகள் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்.
அதேபோல தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து நீதிமன்ற வளாகத்துக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியை ஒட்டியுள்ள நீதிமன்ற வளாகத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.