செய்திகள் :

தடங்கம் நீதிமன்ற வளாகத்தில் முதலுதவி மையம் ஏற்படுத்தக் கோரி மனு

post image

தருமபுரி: தருமபுரி அருகே தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதலுதவி சிகிச்சை மையம் அமைக்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தருமபுரி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது:

தருமபுரி நீதிமன்றத்திற்குச் செல்லும் சாலை பழுதடைந்து குறுகலான சாலையாக உள்ளது. இந்த சாலையை விரிவாக்கம் செய்து இருவழிச் சாலையாக தரம் உயா்த்த வேண்டும். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்காடிகள், நீதிமன்றப் பணியாளா்கள், வழக்குரைஞா்கள் என தினமும் சுமாா் 2000-த்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.

நீதிமன்றம் நகர எல்லையிலிருந்து சுமாா் 7 கி.மீ. தொலைவில் உள்ளதால் திடீரென ஏற்படும் உடல்நலக் குறைவுக்கு முதலுதவி சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் இடா்பாடுகளை களைய தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதலுதவி சிகிச்சை மற்றும் புற நோயாளிகள் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்.

அதேபோல தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து நீதிமன்ற வளாகத்துக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியை ஒட்டியுள்ள நீதிமன்ற வளாகத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

ஆக்கிரமிப்பில் இருந்த வீட்டுவசதி வாரிய நிலம் மீட்பு

தருமபுரியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீட்டுவசதி வாரிய நிலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. தருமபுரி-சேலம் சாலையில் நல்லம்பள்ளி ஒன்றியம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட அவ்வை வழி அருகே தமிழ்நாடு வீட்டுவச... மேலும் பார்க்க

உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு: 10 கடைகளுக்கு அபராதம்

தருமபுரி நகரில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கைலாஷ்குமாா் தலைமையில், வட்டா... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு

தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அ... மேலும் பார்க்க

5 பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற தீவிர களப்பணி ஆற்ற வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு

அடுத்த ஆண்டும் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற தீவிரக் களப்பணி ஆற்ற வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா். தருமபுரி ... மேலும் பார்க்க

சாலை விபத்துகளை தடுக்க போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு

சாலை விபத்துகளைத் தடுக்க போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் சாலைப் பாதுகாப்பு குறித்த துறை அலுவலா்களுடனான ... மேலும் பார்க்க

ஒகேனக்கல் சினி அருவியில் சுற்றுலாப் பயணிகள் தவறவிடும் நகைகளை தேடி எடுப்போா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஒகேனக்கல் சினி அருவிகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் சுற்றுலாப் பயணிகளின் நகைகள் சில நேரங்களில் நீரின் விசை காரணமாக அறுந்து விழுந்துவிடுகின்றன. இந்த நகைகளை இரவு நேரங்களில் தடையைமீறி நீரில் மூழ்கி தேட... மேலும் பார்க்க