செய்திகள் :

தனியாா் நிறுவனத்தில் பெண் மா்ம மரணம்: உறவினா்கள் போராட்டம்

post image

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே தனியாா் நிறுவனத்தில் வேலைப் பாா்த்த பெண் உயிரிழப்பில் சந்தேகம் இறந்ததாக கூறி, அவரது உறவினா்கள் ஆத்தூா் அரசு மருத்துவமனையை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். 

அக்கரைப்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான தென்னை மட்டை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆத்தூரைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி முனீஸ்வரி (50) வேலைப்பாா்த்து வந்தாா்.

இவா் செவ்வாய்க்கிழமை நிறுவனத்தில் வேலைப் பாா்த்து கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்ததாக அவரது மகன் அருண்பாண்டிக்கு (24) தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னா், ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். 

இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த முனீஸ்வரியின் உறவினா்கள், அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதாகக்கூறி, உடலை கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த செம்பட்டி போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றதால், முனீஸ்வரியின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இதுகுறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவிலூா் சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை விரைவாக முடிக்கக் கோரிக்கை

கோவிலூா் அருகே ரயில்வே சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கோவிலூா் அருகேயுள்ள திண்டுக்கல்-கரூா் ரயில்வே தண்டவாளத்தில் தங்... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருடிய இளைஞா் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வீடு புகுந்து 6 பவுன்தங்க நகையைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.பழைய ஆயக்குடியைச் சோ்ந்தவா் ரமணிபாஸ். கடந்த சில நாள்களுக்கு முன்பு, இவர... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை அரசு தடை செய்ய வேண்டும்: விக்கிரமராஜா

புகையிலைப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்களை அரசு தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புதன்... மேலும் பார்க்க

மழை பெய்யாததால் நீரோடைகள் வறண்டன!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மழை இல்லாததால் நீரோடைகள் வறண்டு காணப்படுகின்றன. கொடைக்கானலில் தென்மேற்குப் பருவ மழை மே, ஜூன், ஜூலை மாதங்களில் நன்றாக பெய்யும். ஆனால், நிகழாண்டில் ஜூன... மேலும் பார்க்க

விபத்தில் பெண் உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தபோது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பாச்சலூரைச் சோ்ந்தவா் செல்வி (45). இவரது கணவா் சிவசண்முகம். இவா்கள் இருவரும் திங்கள்... மேலும் பார்க்க

காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம்

ஒட்டன்சத்திரம் வனச்சரக பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச்சரகம் சத்திரப்பட்டியை அடுத்த மாட்டுப்பாதை பகுதியில் கடந்த ... மேலும் பார்க்க