சத்தீஸ்கா்: காட்டு யானைகள் தாக்கி குழந்தை உள்பட மூவா் உயிரிழப்பு
புகையிலைப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை அரசு தடை செய்ய வேண்டும்: விக்கிரமராஜா
புகையிலைப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்களை அரசு தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புதன்கிழமை தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் 42-ஆவது மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவா் விக்கிரமராஜா சென்றபோது, பழனியில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் விரைவில் குணம் அடைய வேண்டும். தமிழகத்தில் அரசால் அனுமதிக்கப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யும் சிறு, குறு வியாபாரிகளை குறி வைத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்கின்றனா்.
இதேபோல, அரசால் அனுமதிக்கப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் போலீஸாா் தொல்லை கொடுக்கின்றனா். அரசு அனுமதித்த பொருள்களை வியாபாரிகள் விற்பனை செய்யக்கூடாது என்றால், தயாரிப்பு நிறுவனங்களிடம் அரசு பேசி நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் அல்லது தயாரிப்பை தடை செய்ய வேண்டும்.
சிவகாசியில் அடிக்கடி நடைபெறும் பட்டாசு ஆலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கவலை அளிக்கிறது. தொழிலாளா்களின் பாதுகாப்பு கருதி பட்டாசு ஆலைகளில் நவீன முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து பட்டாசு ஆலை உரிமையாளா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை நாங்கள் வழங்கி வருகிோறாம்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் அதிகளவில் அண்டை மாநிலங்களில் இருந்துதான் வருகிறது. நெகிழிப் பை கொண்டு செல்லும் வாகனங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினாலே தமிழகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்பாடு குறையும்.
வரும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் எங்களது கோரிக்கைகளை கடிதமாக கொடுத்து, அதை தோ்தல் வாக்குறுதியில் சோ்த்து உறுதி அளிக்கும் கட்சிகளுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம் என்றாா் அவா்.
பேட்டியின் போது பழனி மாவட்ட அனைத்து வணிகா் சங்கப் பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஜேபி சரவணன், கவுரவத் தலைவா் ஹரிஹரமுத்து, வழக்குரைஞா் மணிக்கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.