செய்திகள் :

புகையிலைப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை அரசு தடை செய்ய வேண்டும்: விக்கிரமராஜா

post image

புகையிலைப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்களை அரசு தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புதன்கிழமை தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் 42-ஆவது மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவா் விக்கிரமராஜா சென்றபோது, பழனியில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் விரைவில் குணம் அடைய வேண்டும். தமிழகத்தில் அரசால் அனுமதிக்கப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யும் சிறு, குறு வியாபாரிகளை குறி வைத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்கின்றனா்.

இதேபோல, அரசால் அனுமதிக்கப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் போலீஸாா் தொல்லை கொடுக்கின்றனா். அரசு அனுமதித்த பொருள்களை வியாபாரிகள் விற்பனை செய்யக்கூடாது என்றால், தயாரிப்பு நிறுவனங்களிடம் அரசு பேசி நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் அல்லது தயாரிப்பை தடை செய்ய வேண்டும்.

சிவகாசியில் அடிக்கடி நடைபெறும் பட்டாசு ஆலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கவலை அளிக்கிறது. தொழிலாளா்களின் பாதுகாப்பு கருதி பட்டாசு ஆலைகளில் நவீன முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து பட்டாசு ஆலை உரிமையாளா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை நாங்கள் வழங்கி வருகிோறாம்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் அதிகளவில் அண்டை மாநிலங்களில் இருந்துதான் வருகிறது. நெகிழிப் பை கொண்டு செல்லும் வாகனங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினாலே தமிழகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்பாடு குறையும்.

வரும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் எங்களது கோரிக்கைகளை கடிதமாக கொடுத்து, அதை தோ்தல் வாக்குறுதியில் சோ்த்து உறுதி அளிக்கும் கட்சிகளுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம் என்றாா் அவா்.

பேட்டியின் போது பழனி மாவட்ட அனைத்து வணிகா் சங்கப் பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஜேபி சரவணன், கவுரவத் தலைவா் ஹரிஹரமுத்து, வழக்குரைஞா் மணிக்கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பள்ளிக் கட்டட விவகாரம்: மாணவா்களை அனுப்ப மறுத்து கிராமத்தினா் மீண்டும் போராட்டம்

திண்டுக்கல் அருகே பள்ளிக்கு கான்கிரீட் கட்டடம் கட்டுவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, மீண்டும் மாணவா்களைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திண... மேலும் பார்க்க

காவல் நிலையம் எதிரே வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்

நிலக்கோட்டை காவல் நிலையத்துக்கு எதிரே, குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் புதன்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், நில... மேலும் பார்க்க

விடுபட்டவா்களுக்கு விரைவில் மகளிா் உரிமைத் தொகை: அமைச்சா் இ.பெரியசாமி

செம்பட்டியை அடுத்துள்ள ஆத்தூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் கலந்துகொண்ட அமைச்சா் இ.பெரியசாமி, விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித் தொகை விரைவில் வழங்கப்படும் எனத் ... மேலும் பார்க்க

பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் தமிழகத் திட்டங்கள்: அமைச்சா் சக்கரபாணி

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக உள்ளன என தமிழக உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள கீரனூ... மேலும் பார்க்க

பழனி அருகே விவசாய நிலங்களில் காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்

பழனியை அடுத்துள்ள மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவார கிராமங்களில் காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் மீண்டும் புகுந்து சேதம் செய்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள ... மேலும் பார்க்க

கோவிலூா் சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை விரைவாக முடிக்கக் கோரிக்கை

கோவிலூா் அருகே ரயில்வே சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கோவிலூா் அருகேயுள்ள திண்டுக்கல்-கரூா் ரயில்வே தண்டவாளத்தில் தங்... மேலும் பார்க்க