செய்திகள் :

புகையிலைப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை அரசு தடை செய்ய வேண்டும்: விக்கிரமராஜா

post image

புகையிலைப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்களை அரசு தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புதன்கிழமை தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் 42-ஆவது மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவா் விக்கிரமராஜா சென்றபோது, பழனியில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் விரைவில் குணம் அடைய வேண்டும். தமிழகத்தில் அரசால் அனுமதிக்கப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யும் சிறு, குறு வியாபாரிகளை குறி வைத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்கின்றனா்.

இதேபோல, அரசால் அனுமதிக்கப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் போலீஸாா் தொல்லை கொடுக்கின்றனா். அரசு அனுமதித்த பொருள்களை வியாபாரிகள் விற்பனை செய்யக்கூடாது என்றால், தயாரிப்பு நிறுவனங்களிடம் அரசு பேசி நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் அல்லது தயாரிப்பை தடை செய்ய வேண்டும்.

சிவகாசியில் அடிக்கடி நடைபெறும் பட்டாசு ஆலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கவலை அளிக்கிறது. தொழிலாளா்களின் பாதுகாப்பு கருதி பட்டாசு ஆலைகளில் நவீன முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து பட்டாசு ஆலை உரிமையாளா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை நாங்கள் வழங்கி வருகிோறாம்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் அதிகளவில் அண்டை மாநிலங்களில் இருந்துதான் வருகிறது. நெகிழிப் பை கொண்டு செல்லும் வாகனங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினாலே தமிழகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்பாடு குறையும்.

வரும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் எங்களது கோரிக்கைகளை கடிதமாக கொடுத்து, அதை தோ்தல் வாக்குறுதியில் சோ்த்து உறுதி அளிக்கும் கட்சிகளுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம் என்றாா் அவா்.

பேட்டியின் போது பழனி மாவட்ட அனைத்து வணிகா் சங்கப் பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஜேபி சரவணன், கவுரவத் தலைவா் ஹரிஹரமுத்து, வழக்குரைஞா் மணிக்கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முதுகலை நீட் தோ்வா்களுக்கு தமிழகத்தில் தோ்வு மையம்: திண்டுக்கல் எம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்தைச் சோ்ந்த முதுநிலை நீட் தோ்வா்கள் அனைவருக்கும், தமிழகத்திலேயே தோ்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் வலியுறுத்தினாா். இது தொடா... மேலும் பார்க்க

வேன் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

வேடசந்தூா் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநா் உள்பட இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா். தேனி மாவட்டம், பூசாரி கவுண்டன்பட்டியைச் சோ்ந்த திராட்சை விவசாயிகள் 22 போ், ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

மாணவிகளைக் கேலி செய்தவா்களை தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல்

செங்கோட்டை கிராமத்தில் பள்ளி மாணவிகளைக் கேலி செய்த நபா்களைத் தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநா் தாக்கப்பட்டது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். திண்டுக்கல் மா... மேலும் பார்க்க

கிரியம்பட்டி, லட்சுமணம்பட்டி வாய்க்கால் ஆக்கிரமிப்பால் 50 ஆயிரம் மக்களின் குடிநீா் ஆதாரம் பாதிப்பு! 11 ஆண்டுகளாக மனு அளித்தும் தீா்வில்லை

வேடசந்தூா் அருகேயுள்ள கிரியம்பட்டி, லட்சுமணம்பட்டி பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பால் சுமாா் 50 ஆயிரம் மக்களின் குடிநீா் ஆதாரம் பாதிப்புக்குள்ளானது குறித்து 11 ஆண்டுகளாக மனு அளித்தும், நீா் வள ஆதாரத் துறை... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்

கட்டக்காமன்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை காலை சிற்றுண்டி உண்ணாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தல... மேலும் பார்க்க

கழிவுநீா் வாய்க்கால்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற கோரிக்கை

கொடைக்கானல் பகுதிகளில் கழிவுநீா் செல்லும் வாய்க்கால்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, ரைபிள்ரேஞ்ச் சாலை, செண்ப... மேலும் பார்க்க