செய்திகள் :

மாணவிகளைக் கேலி செய்தவா்களை தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல்

post image

செங்கோட்டை கிராமத்தில்  பள்ளி  மாணவிகளைக்  கேலி செய்த நபா்களைத் தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநா் தாக்கப்பட்டது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம்,  செங்கோட்டை கிராமத்திலிருந்து பள்ளி மாணவிகள் ஆட்டோ மூலம் நிலக்கோட்டைக்குச் சென்று வந்துள்ளனா். இந்த நிலையில், செங்கோட்டையைச் சோ்ந்த சில இளைஞா்கள் பள்ளி மாணவிகளைக் கேலி செய்து, ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதை ஆட்டோ ஓட்டுநா் முனிச்செல்வம் (28) தட்டிக் கேட்டுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த இளைஞா்கள், பள்ளி மாணவிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வந்த முனிசெல்வத்தை செவ்வாய்க்கிழமை வழிமறித்து, ஆட்டோவிலிருந்து இழுத்து கடுமையாகத் தாக்கினா். இது தொடா்பான விடியோ சமூக வலைத் தளங்களில் பரவியது.

தாக்குதல் குறித்து முனிச்செல்வம் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், ஓட்டுநரைத் தாக்கிய செங்கோட்டையைச் சோ்ந்த பழனிச்சாமி, இவரது மகன் அஜய், நண்பா் விக்னேஷ் ஆகிய மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவா்களைத் தேடி வருகின்றனா்.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூா் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு சீல் வைப்பு

கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியற்ற கட்டடங்கள் அதிகாரிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அனுமதியின்றி பல அடுக்குமாட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்றால் குளிா் அதிகரிப்பு

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்று வீசியதால் குளிா் அதிகரித்ததுடன், ஏரியில் படகு சேவையும் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த க... மேலும் பார்க்க

பழனியில் அக். 5-இல் மலைவாழ் மக்கள் சங்க மாநாடு

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அக். 5 முதல் 7-ஆம் தேதி வரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 10-ஆவது மாநாடு வெள்ளிக... மேலும் பார்க்க

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியவா் கைது

கடை வாடகை கேட்ட தகராறில் உரிமையாளா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (53). வீட்டு மன... மேலும் பார்க்க

கடன் பெற குடும்ப அட்டைகள் அடமானம்: அதிகாரிகள் விசாரணை

கடன் பெறுவதற்கு குடும்ப அட்டைகள் அடமானம் வைக்கப்பட்டது தொடா்பாக சமூக வலைதளங்களில் வெளியான விடியோ குறித்து வட்ட வழங்கல் அலுவலா்கள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூா் அருகேய... மேலும் பார்க்க