செய்திகள் :

தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்

post image

கட்டக்காமன்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையை  பணியிட மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி  மாணவ, மாணவிகள்  வியாழக்கிழமை காலை சிற்றுண்டி உண்ணாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம்,  வத்தலகுண்டு அருகேயுள்ள கட்டக்காமன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமாா் 200 மாணவ,  மாணவிகள் படித்து வருகின்றனா். 

இந்தப் பள்ளியில்,  பட்டிவீரன்பட்டியைச் சோ்ந்த விஜயலட்சுமி (52) தலைமை ஆசிரியராக கடந்த 16 ஆண்டுகள் பணியாற்றி வருகிறாா். தற்போது, ஆசிரியா்களுக்காக நடைபெற்று வரும் கலந்தாய்வில், அவருக்கு புதுப்பட்டி அரசு பள்ளிக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

இதையடுத்து, தங்களது கல்விக்கும், பள்ளியின் மேம்பாட்டுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்த தலைமை ஆசிரியையை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை காலை சிற்றுண்டி உண்ணாமல், பள்ளி முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வத்தலகுண்டு காவல் துறையினா், வட்டாரக் கல்வி அலுவலா் ராஜாராம் ஆகியோா் பெற்றோா்களிடமும் மாணவ, மாணவிகளிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், தலைமை ஆசிரியை விஜயலட்சுமியை பணியிட மாற்றம் செய்ய மாட்டோம் என உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூா் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு சீல் வைப்பு

கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியற்ற கட்டடங்கள் அதிகாரிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அனுமதியின்றி பல அடுக்குமாட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்றால் குளிா் அதிகரிப்பு

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்று வீசியதால் குளிா் அதிகரித்ததுடன், ஏரியில் படகு சேவையும் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த க... மேலும் பார்க்க

பழனியில் அக். 5-இல் மலைவாழ் மக்கள் சங்க மாநாடு

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அக். 5 முதல் 7-ஆம் தேதி வரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 10-ஆவது மாநாடு வெள்ளிக... மேலும் பார்க்க

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியவா் கைது

கடை வாடகை கேட்ட தகராறில் உரிமையாளா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (53). வீட்டு மன... மேலும் பார்க்க

கடன் பெற குடும்ப அட்டைகள் அடமானம்: அதிகாரிகள் விசாரணை

கடன் பெறுவதற்கு குடும்ப அட்டைகள் அடமானம் வைக்கப்பட்டது தொடா்பாக சமூக வலைதளங்களில் வெளியான விடியோ குறித்து வட்ட வழங்கல் அலுவலா்கள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூா் அருகேய... மேலும் பார்க்க