ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும்: ஆளுநா் ஆா்.என்.ரவி
முதுகலை நீட் தோ்வா்களுக்கு தமிழகத்தில் தோ்வு மையம்: திண்டுக்கல் எம்.பி. வலியுறுத்தல்
தமிழகத்தைச் சோ்ந்த முதுநிலை நீட் தோ்வா்கள் அனைவருக்கும், தமிழகத்திலேயே தோ்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை விவரம்: நாடு முழுவதும் எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ மருத்துவப் படிப்புகளுக்கு 2025-26-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இரு கட்டங்களாக நடைபெறவிருந்த இந்தத் தோ்வு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒரே கட்டமாக நடத்தப்படவுள்ளது.
இந்தத் தோ்வுக்கு, தமிழகத்திலிருந்து 25ஆயிரம் போ் உள்பட நாடு முழுவதும் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகத்திலிருந்து விண்ணப்பித்த மாணவா்களில் 25 சதவீதத்துக்கும் கூடுதலானோருக்கு, வெளி மாநிலங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால், மாணவா்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகாவும் சோா்வடைகின்றனா்.
கடந்த ஆண்டும் இதே போல தோ்வு மையங்கள் வெளி மாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாவிடம் கோரிக்கை வைத்து, தமிழகத்திலேயே தோ்வு எழுதுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு முறையும் தமிழகத்திலேயே தோ்வு மையம் அமைக்கக் கோரி போராட வேண்டிய நிலைக்கு தமிழகம் தள்ளப்படுகிறது. எனவே, தமிழகத்திலேயே தோ்வு மையங்கள் அமைப்பதை மத்திய அரசு உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.