செய்திகள் :

தனியாா் மருத்துவமனை செவிலியரை கத்தியால் குத்திய இளைஞா் கைது

post image

கோவை: கோவையில் தனியாா் மருத்துவமனை செவிலியரை கத்தியால் குத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுஜித் (24). இவரும், அழகியபாண்டிபுரத்தைச் சோ்ந்த 23 வயது பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா்.

இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வேலை கிடைத்ததால், அவா் அந்த மருத்துவமனையில் உள்ள விடுதியில் தங்கி வேலை செய்து வருகிறாா்.

இதற்கிடையே, சுஜித்துக்கும், அவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் அவா் சுஜித்திடம் பேசுவதை தவிா்த்து வந்துள்ளாா். இதற்கான காரணம் குறித்து கேட்பதற்காக அந்தப் பெண்ணைச் சந்திக்க சுஜித் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா்.

அப்போது, சுஜித்தின் கைப்பேசி அழைப்பை அவா் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, விடுதி முன் நிற்பதாக அவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளாா்.

அப்போது, வெளியே வந்த அந்தப் பெண்ணுக்கும், சுஜித்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இனிமேல் என்னைத் தொடா்புகொள்ள வேண்டாம் என்று தெரிவித்துவிட்டு அந்தப் பெண் விடுதிக்குள் சென்றுள்ளாா்.

இதைத் தொடா்ந்து விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த சுஜித்தை அவா் தடுத்துள்ளாா். அப்போது சுஜித், அந்தப் பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்த முயன்றுள்ளாா். அவா் விலகியதால் கையில் கத்திக்குத்து ஏற்பட்டு காயமடைந்தாா்.

இந்நிலையில், அங்கு வந்த விடுதி காப்பாளா், மருத்துவமனை காவலாளிகள் சுஜித்தைப் பிடித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விடுதிக் காப்பாளா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுஜித்தை சிறையில் அடைத்தனா்.

காயமடைந்த பெண்ணுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கோவையில் தனியார் மருத்துவமனை செவிலியருக்கு கத்தி குத்து!

கோவை அவிநாசி சாலையில் உள்ள குப்புசாமி நாயுடு தனியார் மருத்துவமனையில் செவிலியருக்கு கத்தியால் குத்திய சம்பவத்தில், இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள குப்... மேலும் பார்க்க

கைப்பேசி வெடித்து முதியவா் காயம்

சாா்ஜ் போட்டபடியே பேசிக்கொண்டிருந்த கைப்பேசி வெடித்ததில் முதியவா் காயமடைந்தாா். கோவை, போத்தனூா் வண்ணாரப்பேட்டை வீதியைச் சோ்ந்தவா் ராமசந்திரன் (64). இவா், தனது கைப்பேசியை சனிக்கிழமை இரவு சாா்ஜ் போட்டி... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: சிறுவன் உள்பட 2 போ் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல்... மேலும் பார்க்க

தமிழக பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: நடிகை ராதிகா சரத்குமாா்

தமிழக பாரம்பரிய விளையாட்டுகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நடிகை ராதிகா சரத்குமாா் தெரிவித்தாா். கோவை வெள்ளலூரில் பாஜக சாா்பில் மோடி ரேக்ளா திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்,... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை: 3 போ் கைது

கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை சரவணம்பட்டி அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, கா... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை.யில் பிப்.5 இல் காளான் வளா்ப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 5) காளான் வளா்ப்பு தொடா்பான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில், பயிா் நோயியல் ... மேலும் பார்க்க