செய்திகள் :

`தமிழகத்தில் தங்கம் விலை நிலவரத்தைப்போல கொலை நிலவரம்...' - இபிஎஸ் பேச்சு!

post image

தமிழகத்தில் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற அடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு மலர் தூவி, மேலதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நகர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் திடலில் மக்களை சந்தித்து பேசுகையில், “விவசாயிகளுக்கு என எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வரவில்லை, மாறாக அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் திமுக அரசு தடுத்து நிறுத்துகின்ற வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறது. மேலும் தமிழகத்தில் கஞ்சா விற்காத இடமே இல்லை என்ற வகையில் போதைப் பழக்கங்கள் அதிகரித்து வரக்கூடிய சூழலால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இபிஎஸ் பிரசாரம்

பொதுவாக தங்கம் விலை நிலவரத்தை பார்ப்பதுபோல தற்போது தமிழகத்தில் கொலை நிலவரத்தை பார்த்து வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சட்ட ஒழுங்கை காப்பாற்றாத திமுகவின் ஆயுட்காலம் இன்னும் ஏழு மாதங்கள் மட்டுமே உள்ளது. நான்காண்டு காலம் மக்களை கண்டு கொள்ளாமல் தற்போது பல்வேறு திட்டங்கள் வாயிலாக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது. அந்த வகையில் திமுக என்றால் மோசடி, மோசடி என்றால் திமுக என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் திமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்ததாக ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் அதிமுக, பாஜக கூட்டணியே மக்கள் நம்பி உள்ளதாகவும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக ஆட்சி அமைக்கும்" எனவும் மக்களிடையே உரையாற்றினார்.

Rahul: ``மதிப்புக்குரிய நீதிபதிகள் தீர்மானிக்க மாட்டார்கள்..!" - பிரியாங்கா

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்த‌தாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையின் போது, ``கரு... மேலும் பார்க்க

TVK: "அதே பிரமாண்டத்தோடும் உற்சாகத்தோடும் நடைபெறும்" - மதுரை மாநாடு மாற்று தேதியை அறிவித்த விஜய்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால், ஆகஸ்ட் 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால் ஆகஸ்ட் 18 முதல் 22-க்குள் மாநாடு... மேலும் பார்க்க

"இந்தியா மீதான வரி 24 மணி நேரத்தில் உயரும்" - மீண்டும் எச்சரித்த ட்ரம்ப்!

இந்தியா ஒரு நல்ல வர்த்தக நண்பர் இல்லை என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் மீதான வரி கணிசமாக உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.சில நாள்களுக்கு முன்பு இந்தியாவின் மீது 25% வரி... மேலும் பார்க்க

ஜெய்பூரில் நின்ற உக்ரைன் அதிபர் மனைவியின் விமானம் - காரணம் தெரியுமா?

உக்ரைன் நாட்டின் உயர் மட்ட தூதுக்குழு சென்ற விமானம் கடந்த ஞாயிறு அன்று (ஆகஸ்ட் 3) ஜெய்பூர் சர்வதேச விமான நிலையத்தில் நின்றிருக்கிறது. அந்த விமானத்தில் உக்ரைனின் முதல் பெண்மணியும் ஜனாதிபதி விளோதிமிர் ஜ... மேலும் பார்க்க