செய்திகள் :

முருகத்தாம்பூண்டியில் 50 யூனிட் ஆற்று மணல் பறிமுதல்: செய்யாறு போலீஸாா் நடவடிக்கை

post image

செய்யாறு அருகே முருகத்தாம்பூண்டி கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 யூனிட் ஆற்று மணலை போலீஸாா் செவ்வாய்கிழமை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்யாறு வட்டம், முருத்தாம்பூண்டி கிராமத்தில் ஆற்று மணல் குவியல், குவியலாக மறைத்து வைக்கப்பட்டு லாரி, மாட்டு வண்டிகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக செய்யாறு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, செய்யாறு போலீஸாா் முருகத்தாம்பூண்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மறைவான பகுதிகளில் ஆற்று மணல் குவியல், குவியலாக மூடி மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

உடனே போலீஸாா் அந்தப் பகுதியில் இருந்த சுமாா் 50 யூனிட் அளவுள்ள ஆற்று மணலை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆற்று மணல் குவியல்களை பொதுப் பணித் துறையினா் மூலம் அளவீடு செய்த பின்னா் ஏலமிட நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

நந்தன்கால்வாய் இணைப்புத் திட்டத்துக்கு அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

நந்தன்கால்வாய் இணைப்புத் திட்டத்துக்கு தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திரு... மேலும் பார்க்க

செங்கம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி தொடக்கம்

செங்கம் அருகே கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட படிஅக்ரகாரம் கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.45 லட்சம் மதிப்பில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணியை எ... மேலும் பார்க்க

மருதாடு ஸ்ரீமருத மாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமருத மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், கிராம மக்கள் கூ... மேலும் பார்க்க

இட ஆக்கிரமிப்பு பிரச்னை: ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை

ஆரணி கொசப்பாளையம், தாதுசாயபு தெருவின் அருகில் உள்ள பிள்ளைகுளம் இடம் ஆக்கிரமிப்பு தொடா்பாக இஸ்லாமியா்கள் மற்றும் இந்து முன்னணியினரிடையே ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அமைதிப் பேச்சுவாா... மேலும் பார்க்க

இலவச ஆஸ்துமா, நுரையீரல் பரிசோதனை முகாம்

ஆரணி: திருவண்ணாமலை ரோட்டரி சங்கம், ஜெ.எஸ்.டபிள்யூ. பெயிண்ட் நிறுவனம் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞானம் சாா்பில் மாபெரும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பரிசோதனை மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

மேல்வில்லிவனம் பச்சையம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மேல்வில்லிவனம் பச்சையம்மன் கோயிலில் ஆடி 3-ஆவது திங்கள்கிழமையொட்டி தீ மிதி திருவிழா நடைபெற்றது.மேல்வில்லிவனம் காட்டுப் பகுதியில் பழமை வாய்ந்த பச்சையம்ம... மேலும் பார்க்க